ஆப்நகரம்

ஏய் தீவிரவாதமே! நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து

"எப்படி சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களின் மாமிசம் அழிவதை, எப்படி பொறுப்போம் சிம்லா பனிக்கட்டிகள் சிவப்பாய் உறைவதை. ஏய் தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப்புறத்தில் அல்ல, கொல்லைபுறத்தில்." என்று தெரிவித்திருக்கிறார்.

Samayam Tamil 16 Feb 2019, 9:46 pm
புல்வாமா குண்டு வெடிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, பயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது எனக் கூறியுள்ளார்.
Samayam Tamil 4667999315476315471167174117Vairamuthu edit2


ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தனர். இவர்களில் சுப்பிரமணியன் என்பவர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்தவர். சிவ சந்திரன் என்பவர் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்தவர். இவர்களுடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட பாடலசாரியர் வைரமுத்து புல்வானா தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், "எப்படி சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களின் மாமிசம் அழிவதை, எப்படி பொறுப்போம் சிம்லா பனிக்கட்டிகள் சிவப்பாய் உறைவதை. ஏய் தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப்புறத்தில் அல்ல, கொல்லைபுறத்தில்." என்று தெரிவித்திருக்கிறார்.

"வீரர்களின் பாதங்களில் வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர். ஓயமாட்டோம், சாயமாட்டோம்; தேசிய கீதத்தில் ஒப்பாரி ராகம் ஒட்டாது, தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்காது. அகிம்சா தேசம் பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா மன்னிகாது இனியும்" என வைரமுத்து ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்