ஆப்நகரம்

நேற்று 3: இன்னும் எத்தனை உயிரை அந்த ஃபிலிம் சிட்டி காவு வாங்கப் போகுதோ?

ஈவிபி ஃபிலிம் சிட்டியில் உயிர்கள் பறிபோவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

Samayam Tamil 20 Feb 2020, 2:14 pm
ஈவிபி ஃபிலிம் சிட்டியில் உயிர்கள் பறிபோவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
Samayam Tamil indian 2 accident netizens worry about the deaths in nazarathpet evp film city
நேற்று 3: இன்னும் எத்தனை உயிரை அந்த ஃபிலிம் சிட்டி காவு வாங்கப் போகுதோ?


இந்தியன் 2 கிரேன் விபத்து

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர். கமலும், காஜலும் கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பியுள்ளனர். சென்னை நசரத்பேட்டை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்த இந்த விபத்தால் படக்குழு மட்டும் அல்ல சினிமா ரசிகர்களும் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

பிகில்

ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விபத்து ஏற்பட்டு உயிர் போனது இது முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஆண்டு விஜய்யின் பிகில் படப்பிடிப்பு நடந்தபோது கிரேனில் இருந்து தொங்கிய ஃபோகஸ் லைட் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் தலையில் விழுந்தது. தற்போது இந்தியன் 2 செட்டில் கிரேன் அறுந்து விழுந்துள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது டெக்னீஷியன் தவறி விழுந்து உயிர் இழந்தார்.

காலா

கடந்த 2017ம் ஆண்டு ரஜினியின் காலா படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்தது. அப்பொழுது அங்கு பணியாற்றிய ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னதாக பொழுதுபோக்கு பூங்காவாக இருந்த இடத்தை தான் பின்னர் ஈவிபி ஃபிலிம் சிட்டியாக மாற்றினார்கள்.

பலி

பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தபோது நாகாலாந்தை சேர்ந்த ஏர் ஹோஸ்டஸ் அபியா மேக் என்கிற 25 வயது பெண் ராட்டினத்தில் சுற்றியபோது தவறி விழுந்து இறந்தார். அதற்கு முன்பு சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ராட்டினத்தில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். மேலும் 16 சிறுவனும் அந்த பூங்காவில் காயம் அடைந்தார். ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தொடர்ந்து உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கிறது. அந்த இடம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்