ஆப்நகரம்

உயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்!

தலையில் ஏற்பட்டுள்ள மூளை கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார் நடிகை சரண்யா சசி.

Samayam Tamil 11 Jun 2019, 3:27 pm
தலையில் ஏற்பட்டுள்ள மூளை கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார் நடிகை சரண்யா சசி.
Samayam Tamil saran 10


தமிழில் வ. கீராவின் இயக்கத்தில் வெளியான படம் பச்சை என்கிற காத்து. இப்படத்தில் நடித்தவர்தான் சரண்யா சசி. கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, தலப்பாவு மரியா காலிப்பினலு ஆகிய படங்களில் நடித்தவர். மேலும் பல டீவித் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மூளையில் கட்டி ஏற்பட்டதால கடுமையாக பாதிக்கப்ட்டார். கடும் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த அவர் பினு சேவியர் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் சினிமா டிவியில் தன் நடிப்பினை தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது வரை ஆறு ஆப்பரேஷன் நடந்துள்ள நிலையில் அவருக்கு மீண்டும் ஆபரேஷன் செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால சக நட்சத்திரங்கள் அவரது மருத்துவ செலவுக்கு உதவ வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சூரஜ் பாலகரன் நடிகை சீமா இணைந்து ஓர் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகை சரண்யா சசிக்கு இதுவரை ஆறு முறை ஆபரேஷன் நடந்துள்ளது. ஏழாவது ஆபரேஷன் செய்ய அனைவரும் உதவ வேண்டும். அவர் உயிர்காக்க உதவுங்கள் எனக் கேட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்