ஆப்நகரம்

வில்லியாக நடிக்கும் ‘வாகை சூடவா’ இனியா!

‘வாகை சூடவா’ படம் மூலம் அறிமுகமான இனியா ஒரு படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்கிறார்.

TOI Contributor 23 Nov 2016, 2:58 pm
‘வாகை சூடவா’ படம் மூலம் அறிமுகமான இனியா ஒரு படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்கிறார்.
Samayam Tamil iniya acts as villi in vagai soodavaa
வில்லியாக நடிக்கும் ‘வாகை சூடவா’ இனியா!


தோற்றம் மாற மாற நாயகி வேடம் கிடைப்பதில்லை. அதனால் கிடைத்த வேடத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டனர் பல நடிகைகள். நமீதா ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி நாயகியாக திகழ்ந்தார். பின்னர் அவர் உடல் எடை கூடியதால் நாயகி வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்த வேடத்தில் நடித்தார். அப்படி நடத்த படம்தான் ‘இளைஞன்’. இந்தப் படத்தில் அவர் வில்லியாக நடித்தார். மேலும் தற்போது நடித்துவரும் ‘பொட்டு’ படத்திலும் அகோரி வேடத்தில் நடித்துள்ளார். நமீதாவை தொடர்ந்து தற்போது வில்லியாக ‘வாகை சூடவா’ நாயகி இனியாவும் இறங்கியுள்ளார்.

நடிகை இனியாவும் சில படங்களில் கேரக்டர் நடிகையாக நடித்து வருகிறார். தற்போது வில்லி வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாக ஒரு ஸ்டேட்மெண்ட் சமீபத்தில் விடுத்தார். அதன் பயனாக செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் இனியா வில்லியாக நடிக்க வாய்பபு கிடைத்துள்ளது. மேலும் கொடூரமான வில்லியாக நடிக்கவும் நான் தயார் என்று ஒரு அதிரடி செய்தியையும் வெளியிட்டுள்ளார் நடிகை இனியா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்