ஆப்நகரம்

‘பொட்டு’ படத்தால் இனியாவின் இந்தி கனவு நனவானது!

இந்தியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘பொட்டு’ படம் மூலம் நிறைவேறியதாக நடிகை இனியா கூறியுள்ளார்.

TNN 28 Mar 2017, 2:24 pm
இந்தியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘பொட்டு’ படம் மூலம் நிறைவேறியதாக நடிகை இனியா கூறியுள்ளார்.
Samayam Tamil iniyas hindi film dream come true
‘பொட்டு’ படத்தால் இனியாவின் இந்தி கனவு நனவானது!


‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இனியா. இந்தப் படத்திற்குப் பிறகு இனியாவுக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த இடம் கிடைக்காததால், தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்த பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்காததால் மறுபடியும் தமிழுக்கு வந்து கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி பல படங்களில் நடித்த இனியா, தற்போது ‘பொட்டு’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

‘பொட்டு’ படம் பற்றி இனியா கூறுகையில், ‘‘என்னை வித்தியாசமான நடிகையாக வெளிப்படுத்தும் படமாக ‘பொட்டு’ அமைந்துள்ளது. இதற்கு முன்பே நான் சில ஹாரர் படங்களில் நடித்தபோதும் இந்த படம் ரொம்ப புதுமையானது. அதோடு, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இப்படம் வெளியாகிறது.

நான், மலையாளம், தமிழ்ப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோதே இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இப்போது நானே எதிர்பார்க்காத வகையில், இந்த பொட்டு படம் இந்தியிலும் வெளியாகிறது. ஆக, எனது சினிமா கனவை இந்த படம் நனவாக்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்