ஆப்நகரம்

ஐபிஎல்லில் தோனியை ரஜினி இப்படி செய்ய சொல்லிட்டாரே!

ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து, நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Apr 2018, 12:05 pm
சென்னை: ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து, நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Actor Rajinikanth
ரஜினிகாந்த்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் சங்கம் சார்பில், காவிரிக்காக மவுன போராட்டம் இன்று நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரிக்காக போராடும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடத்தலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ஐபிஎல் போட்டிகளை நிறுத்தினால் நல்லது. அப்போது தான் போராட்டம் தடைபடாமல் நடைபெறும். இல்லையெனில் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆட வேண்டும்.

ரசிகர்கள் கருப்பு கொடியுடன் களத்திற்கு செல்லலாம். இவற்றால் இந்திய அளவில் காவிரி விவகாரம் முக்கியத்துவம் பெறும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

IPL should be stop due to Cauvery Issue says Rajinikanth.

அடுத்த செய்தி

டிரெண்டிங்