ஆப்நகரம்

"இஅமுகு" படம் ஓடக்கூடாது - வருத்தத்தில் இயக்குனர்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் ஓடினால், இனிமேல் இன்றைய இளைஞர்கள் இதுமாதிரியான படங்களைத்தான் நம்மிடமும் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குனர் விஜய் மில்டன் வருதத்துடன் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 8 May 2018, 1:27 pm
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் ஓடினால், இனிமேல் இன்றைய இளைஞர்கள் இதுமாதிரியான படங்களைத்தான் நம்மிடமும் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குனர் விஜய் மில்டன் வருதத்துடன் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil vijay-milton


பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகிய படங்களை இயக்கியவருமான விஜய் மில்டன், இந்தப் படம் ஓடினால் இனிமேலும் இதுமாதிரியான படங்களைத்தான் வருங்கால சந்ததியினர் எதிர்பார்ப்பார்கள் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தில் இரட்டை அர்த்த நிறைந்த ஆபாச வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்தப் படம் குறித்து பல இயக்குனர்களிடையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இப்படத்தை தாக்கி இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இந்தப் படத்தைப் பற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘அந்தப் படத்தில் இடம்பெற்ற ஆபாசம் நிறைந்த காட்சியை பார்க்கும் போதே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று நினைத்தேன். திரைத்துறையில் இருந்துக் கொண்டே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று சொல்லும் போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பலர் வருகிறார்கள். இந்தப் படம் ஓடியது என்றால், இன்றைய இளைஞர்களுக்கு இந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் போல தோன்றுகிறது. இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டு பலரும் பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற படங்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கால கட்டத்திற்கு இது சரிபட்டு வராது’’ என்றார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்