ஆப்நகரம்

தெலுங்கு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’!

தமிழில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகி அங்குள்ள ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கவுள்ளது.

Samayam Tamil 29 Aug 2018, 4:53 pm
தமிழில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகி அங்குள்ள ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கவுள்ளது.
Samayam Tamil iamk


கௌதம் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ளர். இந்தப் படம் தமிழில் வெளியாகி இளைஞர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடல்ட் ஹாரர் காமெடிப் படமான இதில், நடிகைகள் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகியோரும் நடிகர்கள் ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், நடிகை மதுமிதா உட்பட பலரும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்தப் படத்தை பலரும் விமர்சித்து எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதேசமயம், வசூலிலும் குறைவில்லை. இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார். இந்தப் படத்தில் ஆதித் அருண் இதில் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்