ஆப்நகரம்

தாயாக முடிவெடுத்த சமந்தா! சினிமாவுக்கு முழுக்குப் போடவும் முடிவு!

நடிகை சமந்தா, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேல் சினிமாவில் இருந்து விலக எண்ணியுள்ளார்.

Samayam Tamil 7 Jul 2018, 5:15 pm
நடிகை சமந்தா, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேல் சினிமாவில் இருந்து விலக எண்ணியுள்ளார்.
Samayam Tamil samantha-naga.


நடிகை சமந்தா, நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் நடிகை சமந்தா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் எல்லா படங்களுமே வெற்றிபெற்றுள்ளன.

அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் ‘மெர்சல்’, ‘ரங்கஸ்தலம்’, ‘நடிகையர் திலகம்’ உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. மேலும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவருகிறார். தமிழில் இவர் ‘சீமராஜா’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘யூ-டர்ன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளார் என்று தெலுங்கு மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு காரணம் அவர் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்துவிட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சமந்தா, “எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது தான் என் உலகமாக இருக்கும்“ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்