ஆப்நகரம்

'தெறி' படத்தின் கதை வெளியானதா?

இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் கதை இதுதான் எனக் கூறி, இணையதளங்களில் ஒரு கதை வலம்வர தொடங்கியுள்ளது.

TOI Contributor 17 Mar 2016, 4:09 pm
இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் கதை இதுதான் எனக் கூறி, இணையதளங்களில் ஒரு கதை வலம்வர தொடங்கியுள்ளது.
Samayam Tamil is theri story leaked
'தெறி' படத்தின் கதை வெளியானதா?


அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள தெறி படம், விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில், விஜய் டபுள் ரோல்களில் நடித்துள்ளார் என்றும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி, ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், தெறி படத்தின் கதை, விஜயகாந்த் நடித்த, சத்ரியன் படத்தின் தழுவலாக இருக்குமோ, என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தெறி படத்தின் கதை இதுதான் எனக் கூறி, சமூக ஊடகங்களில், பல்வேறு சினிமா இணையதளங்களிலும் ஒரு கதை வலம்வருகிறது. அது உண்மை இல்லை என்றாலும், அதில் கூறப்பட்டுள்ள கதை என்னவென, இங்கு பார்க்கலாம்.

கண்டிப்பான போலீஸ் அதிகாரி விஜய், அவரது மனைவியாக சமந்தா. இவர்களுக்கு ஒரு மகள் (இதில் நடித்திருப்பவர் நடிகை மீனாவின் மகள்). விஜயின் நண்பராக, கலக்கல் ஆக்சன் ஹீரோவாக, இன்னொரு விஜய். இவருக்கு ஜோடி எமி ஜாக்சன். போலீஸ் அதிகாரி விஜயின் மகளைக் கொல்ல, அவரது எதிரிகள் திட்டமிடுகின்றனர்.

இதுதெரிந்ததும், தனது மகளை, நண்பன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, எதிரிகளை துவம்சம் செய்து, தெறிக்கவிடுகிறார் போலீஸ் அதிகாரி விஜய். பின்னர், விஜயும், அவரது மகளும் ஒன்றுசேர்கிறார்கள். முடிவில், தொடரும் எனப் போட்டு, படத்தை முடித்துள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.

இது உண்மையான கதையா, இல்லையா என்பது பற்றி, தெறி படக்குழு பதிலளிக்க மறுத்துவிட்டது. எனினும், படத்தின் டீசர் லுக்குக்கும், இந்த கதைக்கும் தொடர்பு உள்ளதைப் போல தோன்றுவதால், ரசிகர்களிடையே, தெறி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எது, எப்படி இருந்தாலும், ஏப்ரல் 14ம் தேதியன்று எது உண்மையான கதை எனத் தெரிந்துவிடும். நாமும், அதுவரை காத்திருப்போம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்