ஆப்நகரம்

மாஸ்டர் மாளவிகா மோகனனின் அடுத்த படம் இந்த ஹீரோவுடன் தான்?

மாளவிகா மோகனனின் அடுத்த படம் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 23 Jun 2020, 7:04 pm
நடிகை மாளவிகா மோகனன் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார். தமிழில் இதற்கு முன்பு பேட்ட படத்தில் மட்டும் தான் அவர் நடித்திருக்கிறார். இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
Samayam Tamil Malavika Mohanan


இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதமே இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா லாக் டவுன் காரணமாக அது நிறுத்தப்பட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு தான் தயாரிப்பாளர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முடிவு எடுப்பார் என தெரிகிறது.

இந்நிலையில் மாளவிகா அவரது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். பாலிவுட்டில் தான் அவரது அடுத்த படம் என் கூறப்படுகிறது. அவர் Ravi Udhyawar இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் படத்தில் நடித்திருந்த சித்தாந்த் சதுர்வேதி தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

அதில் நடிப்பதற்காக இவர் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறார் எனக் கூறப்படுகிறது. அதே போல மாளவிகா மேனனுக்கும் சில ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு மாளவிகா மோகனன் பியாண்ட் த கிளவுட்ஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார். இது அவருக்கு இரண்டாவது பாலிவுட் திரைப்படம்.

மாளவிகா மோகனன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி இணைந்து நடிக்கும் படத்தினை எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதமே துவங்க படக்குழு தயாராகி வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக சினிமாத்துறை முற்றிலும் முடங்கி விட்டதால் ஷுட்டிங் துவங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் ஷுட்டிங் துவங்க வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது. அது பற்றிய அதிகாரபூர்வ விவரங்கள் படக்குழு வெளியிட்டால் தான் தெரியவரும்.

தற்போது மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன் விஜய் உடன் பணியாற்றிய அனுபவங்களை பற்றி நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். ஆறு மாத காலத்தில் விஜய் தன் வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக மாறி விட்டதாக தெரிவித்து இருந்தார்.

"மாஸ்டர் படத்தின் பூஜை நடைபெற்ற தினம், அன்று தான் விஜய் சாரை நான் முதன்முதலில் சந்தித்தேன். நான் மிகவும் உற்சாகமாக அதே நேரத்தில் சற்று பதற்றமாகவும் இருந்தேன். அவர் அருகில் இருப்பதற்கு சற்று பயமாகவும் இருந்தது. அன்று அவருடன் பேசுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போது எனக்கு தெரியாது ஆறு மாதங்கள் கழித்து அவர் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்காக மாறுவார் என."

"அவர் சில வார்த்தைகள் மட்டும் தான் பேசுவார். ஆனால் ஒரு சொன்ன வார்த்தையை எப்போதும் காப்பாற்றுவார். அப்படிப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஹாப்பி ஹாப்பி பர்த்டே மிஸ்டர் தளபதி. அவர் எல்லோருக்கும் மாஸ்டர்" என மாளவிகா மோகனன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்