ஆப்நகரம்

ஆசிட் அடிப்பதாக மிரட்டுகிறார்: முன்னாள் கணவர் மீது இசைவாணி திடுக்கிடும் புகார்!

கானா பாடகியான இசைவாணி தனது முன்னாள் கணவரான சதீஷ் என்பவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 7 Jan 2022, 6:21 pm
கானா பாடகியாக பலருக்கும் தெரிந்த இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மேலும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Isaivani
Isaivani


'தி கேஸ்ட்லஸ் சாங்' மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் இசைவாணி. வட சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் கானா பாடல்களை பாடி புகழ் பெற்றார். ஆண்கள் மட்டுமே கானா பாடல்கள் பாடுவார்கள் என்ற நிலையில் கானா இசைத்துறையில் உச்சத்தை தொட்டுள்ளார் இசைவாணி.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இசைவாணி, அதிலும் சிறப்பாக விளையாடி பேரும் பிரபலமானார். இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் என்பவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

தள்ளிப் போன 'வலிமை' வெளியீடு: பொங்கலை குறி வைக்கும் சிறிய பட்ஜெட் படங்கள்!
அதில், விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு சதீஷ் வேறொரு பெண்ணை மணந்துக் கொண்டு, தன்னை மனைவி எனக் குறிப்பிட்டு இசை நிகழ்ச்சிகளில் பாட வைக்கிறேன் எனக் கூறி பணம் பெற்றுள்ளதாகவும், பணத்தைக் கொடுத்தவர்கள் தற்போது தன்னிடம் வந்து கேட்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் இசைவாணி.

மேலும் அவரிடத்தில் இதைப்பற்றி கேட்டபோது, அப்படித்தான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்று தகாத வார்த்தைகளால் திட்டியும், நீ கச்சேரிக்கு செல்லும் பொழுது உன் மீது ஆசிட் வீசி விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார் இசைவாணி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்