ஆப்நகரம்

கார்த்தி ஹீரோயின் வீட்டில் ஐடி ரெய்டு: ரசிகர்கள் போன்று சென்று சோதனை

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

Samayam Tamil 17 Jan 2020, 12:36 pm
நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
Samayam Tamil it officials conduct raid at rashmika mandannas residence
கார்த்தி ஹீரோயின் வீட்டில் ஐடி ரெய்டு: ரசிகர்கள் போன்று சென்று சோதனை


ஐடி ரெய்டு

கார்த்தியின் சுல்தான் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளவர் கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடித்த சரிலேரு நீக்கெவரு படம் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி ரஷ்மிகாவின் கெரியர் சூப்பராக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

ரஷ்மிகா

ரஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் இருக்கும் விராஜ்பேட்டில் வசித்து வருகிறார். காலை 7.30 மணிக்கு வருமான வரித்துறையினர் 10 பேர் ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு மூன்று டாக்சிகளில் ரஷ்மிகாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். அதன் பிறகே தாங்கள் யார் என்பதை கூறி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடந்த போது ரஷ்மிகா வீட்டில் இல்லை.

விசாரணை

ரஷ்மிகாவின் வருமானம், முதலீடுகள் குறித்து அவரின் தந்தையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ரஷ்மிகா பள்ளி மற்றும் பெட்ரோல் பங்க் துவங்க உள்ளது குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது. ரஷ்மிகாவின் வீட்டில் சோதனை நடந்தது சாண்டல்வுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை நடிகை

ரஷ்மிகா அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். கார்த்தி படத்தின் தலைப்பை கூட படக்குழு வெளியிடும் முன்பு ரஷ்மிகா உளறிவிட்டார். தெலுங்கு படங்களில் நடிக்க அவர் கூடுதல் சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். மேலும் கர்நாடகாவில் பிறந்துவிட்டு கன்னடம் பேசுவது கஷ்டமாக உள்ளதாக தெரிவித்ததால் ரஷ்மிகா மீது சாண்டல்வுட் ரசிகர்கள் செம கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்