ஆப்நகரம்

விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனையா? அதிகாரிகள் விளக்கம்

ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் விஜய் வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 12 Mar 2020, 1:03 pm
நடிகர் விஜய் பிகில் படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகம் எழுந்திருப்பதாக கூறி அவரது வீட்டில் பிப்ரவரி 5ம் தேதி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Samayam Tamil Vijays house raided by IT officials yet again


நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடந்துவந்த மாஸ்டர் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த விஜய்யை அதிகாரிகள் தங்கள் காரிலேயே அழைத்துவந்து இரண்டு நாட்களாக வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் அப்போது எதுவும் பணம் அல்லது ஆவணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என செய்தி வெளியானது. சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டிற்கு 3 வாகனங்களில் வந்த 8க்கும் அதிகமான அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக விஜய் வீட்டில் சோதனை செய்யப்படுவதாக செய்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி அதிகாரிகள் விளக்கம அளித்துள்ளனர். ’இது சோதனை அல்ல, சென்ற மாதம் நடந்த சோதனையின்போது சில அறையில் உள்ள லாக்கர்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை விடுவிக்கவே தற்போது அதிகாரிகள் வந்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பு இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டனர் . ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அந்த முடிவை கைவிட்டு, ஒரு நட்சத்திர ஹோட்டலில் இசை வெளியீட்டு விழா நடத்துகின்றனர். அது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்