ஆப்நகரம்

வேதனையா இருக்கு: விவாகரத்து செய்தி குறித்து சமந்தாவின் கணவர்

தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி செய்திகள் வெளியாவதை பார்த்து வேதனையாக இருப்பதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Sep 2021, 12:27 pm
தனக்கும், சமந்தாவுக்கும் விவாகரத்து என்று செய்திகள் வெளியாவதை பார்த்து வேதனைப்பட்டதாக நாக சைதன்யா கூறியிருக்கிறார்.
Samayam Tamil it was painful naga chaitanya about divorce news
வேதனையா இருக்கு: விவாகரத்து செய்தி குறித்து சமந்தாவின் கணவர்


சமந்தா

சமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்பது குறித்து தான் கடந்த சில வாரங்களாக பேச்சாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து நாக சைதன்யா கூறியிருப்பதாவது, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிடுவது வேதனையாக உள்ளது என்றார்.

பர்சனல்

என் கெரியரின் துவக்கத்தில் இருந்தே என் பர்சனல் வாழ்க்கையை பர்சனலாகத் தான் வைத்திருக்கிறேன். பர்சனலையும், கெரியரையும் மிக்ஸ் செய்தது இல்லை. இதை நான் என் பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவர்கள் வீட்டிற்கு வந்தால் வேலை பற்றி பேச மாட்டார்கள், வேலைக்கு சென்றால் பர்சனல் பற்றி பேச மாட்டார்கள் என்றார் நாக சைதன்யா.

வேதனை

என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி செய்திகள் வெளியாவதை பார்த்து முதலில் வேதனையாக இருந்தது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தோன்றியது. ஆனால் இன்று வெளியாகும் செய்தியை நாளை மறந்துவிடுகிறார்கள். உண்மையான செய்திகள் நிலைத்து நிற்கும். மேலோட்டமான செய்திகள், டிஆர்பிக்ககாக உருவாக்கப்படும் செய்திகள் மறக்கப்படும். இதை உணர்ந்த பிறகு அந்த செய்திகள் என்னை பாதிப்பது இல்லை என்று நாக சைதன்யா மேலும் தெரிவித்தார்.

லவ் ஸ்டோரி

சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் நடித்திருக்கும் லவ் ஸ்டோரி தெலுங்கு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. தியேட்டர் வாசலில் இருக்கும் கூட்டத்தை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்