ஆப்நகரம்

நடிகைகள் பாடுவதால் மற்ற பாடகிகளுக்கு பாதிப்பில்லை: இசையமைப்பாளர்!

நடிகைகள் ரம்யா நம்பீசன், நித்யாமேனன், லட்சுமி மேனன் ஆகியோர் படங்களில் பாடுவதால் மற்ற பாடகிகளுக்கு வாய்ப்பு பறிபோகாது என இசையமைப்பாளர் பாலமுரளி பாலு கூறியுள்ளார்.

Samayam Tamil 28 Jun 2018, 5:19 pm
நடிகைகள் ரம்யா நம்பீசன், நித்யாமேனன், லட்சுமி மேனன் ஆகியோர் படங்களில் பாடுவதால் மற்ற பாடகிகளுக்கு வாய்ப்பு பறிபோகாது என இசையமைப்பாளர் பாலமுரளி பாலு கூறியுள்ளார்.
Samayam Tamil bala murali balu


நடிகைகள் ரம்யா நம்பீஸன், நித்யாமேனன், லட்சுமிமேனன் போன்றவர்கள் படங்களில் சொந்த குரலில் பாடல்களும் பாடுகின்றனர். இதனால் திரைப்பட பாடகிகளுக்கு வரும் வாய்ப்பு பறிக்கப்படுவதாக அவர்களுக்குள் ஒரு எண்ணம் தோன்றியுள்ளது.

இதுகுறித்து இசை அமைப்பாளர் பாலமுரளி பாலு கூறுகையில் ‘‘ரம்யா நம்பீசன், நித்யாமேனன், லட்சுமிமேனன் உட்பட பலர் படங்களில் பாடல்கள் பாடினாலும் அவர்களது குரல் குறிப்பிட்ட பாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். அதனால் திரைப்பட பாடகிகளின் வாய்ப்பு பறிபோகாது’’ என்றார் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு.

இவர் இதற்குமுன் ‘டிராபிக் ராமசாமி’, ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டுஅறையில் முரட்டு குத்து’, ‘பீச்சாங்கை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். .தற்போது ‘கஜினிகாந்த்’, ‘தட்றோம் தூக்கறோம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் பாலமுரளி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்