ஆப்நகரம்

படப்பிடிப்பை நிறைவு செய்த 'கருப்பன்' படக்குழு!

விஜய் சேதுபதி நடிப்பில் தேனி மாவட்ட பின்னணியில் உருவாகி வரும் 'கருப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

TNN 14 May 2017, 5:01 pm
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் தேனி மாவட்ட பின்னணியில் உருவாகி வரும் 'கருப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
Samayam Tamil its a wrap for vijay sethupathis karuppan
படப்பிடிப்பை நிறைவு செய்த 'கருப்பன்' படக்குழு!


‘கவண்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கைவசம் பல்வேறு படங்களை வைத்துள்ளார். இந்நிலையில், 'ரேணிகுண்டா' புகழ் இயக்குனர் பன்னீர் செலவத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கருப்பன்' திரைப்படம் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் பின்னணியில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பலே வெள்ளையத் தேவா’ நாயகி தான்யா ஜோடியாக நடிக்கிறார். பாபி சிம்ஹா மிரட்டும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கிஷோர், பசுபதி, சிங்கம்புலி, சரத் லோஹிதஸ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தை ‘ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, விரைவில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை துவங்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் 'கருப்பன்' திரைப்பட முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The entire shooting of 'Karuppan' has been wrapped up and the post-production works will begin soon. 'Karuppan' is being directed by R.Panneerselvam of 'Renigunta' fame. Tanya is playing the female lead in this film while Bobby Simha will be seen as the lead villain.

அடுத்த செய்தி

டிரெண்டிங்