ஆப்நகரம்

பண மோசடி செய்த தனது மானேஜர் மீது பிரபல நடிகை போலீசில் புகார்!

பிரபல நடிகை ஜரீன்கான், தனது மானேஜர், தன்னை ஏமாற்றி பண மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Dec 2018, 4:56 pm
முன்னணி நடிகர்கள், நடிகைகள் எல்லாருமே தனக்கு பக்கபலமாக தனது கால்ஷீட்களை கவனிக்க தனியாக ஒரு பி.ஆர்.ஓ. அல்லது மானேஜர்களை வைத்துக் கொள்வது உண்டு. அவர்களை நம்பி தங்களின் சொத்து விவரங்களையும், குடும்ப பிரச்சினைகளையும் ஒப்படைத்துவிடுவர். அப்படியாக தன்னுடைய மானேஜரால் நம்பி ஏமாற்றப்பட்டவர்தான் நடிகை ஜரீன் கான்.
Samayam Tamil zareen khan


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஜரீன்கான். இவரிடம் மானேஜராக பணியாற்றியவர் அஞ்சலி என்பவர். இவர் நடிகை ஜரீன்கானை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அது பற்றி கேட்டபோது நடிகையை மோசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார். மேலும் செல்போனில் இருந்து சில தகாத மெசேஜ்களையும் அவர் மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து நடிகை ஜரீன்கான், தன்னை ஏமாற்றி பண மோசடி செய்துவிட்டதாக மானேஜர் அஞ்சலி மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்