ஆப்நகரம்

ரஜினிக்கு போட்டியா? ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ஜெய் ஆகாஷ்!

பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ், கௌதம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தோள் கொடு தோழா’ படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கிறார்.

Samayam Tamil 16 Apr 2019, 2:49 pm
தமிழ் சினிமாவில் முக்கிய இளம் நடிகர்களுள் ஒருவர் ஜெய் ஆகாஷ். இவர் நடித்த படம் வெளியாகி பல வருடங்களாகிவிட்டன. தற்போது இவர் ‘தோள் கொடு தோழா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பர்ஸ்ட் பார்வை மூவிஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.
Samayam Tamil jai-akash


நட்பை கௌரவப்படுத்தும் விதமாக ‘தோள் கொடு தோழா’ என்று படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக மும்பையை சேர்ந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் கௌதம் கூறுகையில், ‘‘படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது. அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள்.

அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா. தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது. படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது’ என்றார்.

தலைவர் ரஜினிகாந்த்தும், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி

டிரெண்டிங்