கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதையடுத்து டப்பிங் உள்ளிட்ட வேலைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்நிலையில் பரத்தின் யாக்கை திரி படத்திற்கு டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜனனி சமூக வலைதளத்தில் அண்மையில் வெளியிட்டார். இதையடுத்து டீகே இயக்கத்தில் நடித்திருக்கும் படத்திற்கு நேற்றுடன் டப்பிங்கை முடித்துவிட்டார் ஜனனி.
மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்து ஜனனி கூறியதாவது,
இரண்டாம் அலை தீவிரமான பிறகு தற்போது தான் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறேன். அந்த இரண்டு படங்களுக்கான டப்பிங்கை ஏப்ரல் மாதமே கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் வேலையை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
தற்போது நான் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டதால் ஸ்டுடியோ வரை செல்லும் நம்பிக்கை வந்திருக்கிறது. அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தோம். மேலும் டப்பிங் தியேட்டரில் நான் மட்டும் தான் இருந்தேன். அதனால் பரவாயில்லை.
விரைவில் முன்னறிவன் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.(அந்த படத்தின் ஹீரோவும் பரத் தான்). மீண்டும் வேலைக்கு செல்வதில் சந்தோஷமாக இருக்கிறது, ஆனால் பயமாகவும் இருக்கிறது. இரண்டாம் அலை ரொம்பவே பயமுறுத்திவிட்டது. எனக்கு தெரிந்த பலர் இறந்துவிட்டனர்.
குறுகிய காலத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஆனால் எப்பொழுதும் வீட்டிலேயே இருக்க முடியாது. தடுப்பூசி போட்டதால் நம்பிக்கை வந்திருக்கிறது. இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பேன் என்றார்.
வீடு தேடி வந்த ரூ. 150 கோடியை வாசலோடு திருப்பி அனுப்பிய பிரபாஸ்
மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்து ஜனனி கூறியதாவது,
இரண்டாம் அலை தீவிரமான பிறகு தற்போது தான் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறேன். அந்த இரண்டு படங்களுக்கான டப்பிங்கை ஏப்ரல் மாதமே கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் வேலையை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
தற்போது நான் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டதால் ஸ்டுடியோ வரை செல்லும் நம்பிக்கை வந்திருக்கிறது. அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தோம். மேலும் டப்பிங் தியேட்டரில் நான் மட்டும் தான் இருந்தேன். அதனால் பரவாயில்லை.
விரைவில் முன்னறிவன் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.(அந்த படத்தின் ஹீரோவும் பரத் தான்). மீண்டும் வேலைக்கு செல்வதில் சந்தோஷமாக இருக்கிறது, ஆனால் பயமாகவும் இருக்கிறது. இரண்டாம் அலை ரொம்பவே பயமுறுத்திவிட்டது. எனக்கு தெரிந்த பலர் இறந்துவிட்டனர்.
குறுகிய காலத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஆனால் எப்பொழுதும் வீட்டிலேயே இருக்க முடியாது. தடுப்பூசி போட்டதால் நம்பிக்கை வந்திருக்கிறது. இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பேன் என்றார்.
வீடு தேடி வந்த ரூ. 150 கோடியை வாசலோடு திருப்பி அனுப்பிய பிரபாஸ்