ஆப்நகரம்

நான் அந்த வார்த்தையை அம்மாவிடம் கூறியிருக்கக்கூடாது: ஸ்ரீதேவி மகள் ஜான்வி

என் அம்மா வருத்தப்படும் அளவிற்கு அந்த வார்த்தையை நான் கூறியிருக்கக்கூடாது என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கமாக கூறியுள்ளார்.

Samayam Tamil 11 Jul 2018, 6:49 pm
என் அம்மா வருத்தப்படும் அளவிற்கு அந்த வார்த்தையை நான் கூறியிருக்கக்கூடாது என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கமாக கூறியுள்ளார்.
Samayam Tamil jhanvi-kapoor


பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்ற இடத்தில் திடீரென காலமானார். இவரது மறைவு குறித்து சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் ஜான்வி மற்றும் குஷி. மூத்த மகள் ஜான்வி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதான் இவரின் முதல் படம். ஸ்ரீதேவியின் விருப்பமே ஜான்வியை நடிகையாக பார்க்க வேண்டும் என்பதுதான். தன் மகள் நடித்த முதல் படத்தைக் கூட பார்க்காமல் இறந்துவிட்டார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் ஜான்வி கபூர் தற்போது ஸ்ரீதேவி பற்றி ஒரு பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். “நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பதை நீ பார்க்க வரவேண்டாம் என நானே என் அம்மாவிடம் கூறினேன். கடைசியாக படம் முடிந்தபிறகு பாருங்கள் என கூறியிருந்தேன். அவர் சினிமா பற்றிய என் முடிவுகளில் தலையிடமாட்டார், ‘அப்படி செய்.. இப்படி செய்.. ‘ என எப்போதும் கூறியதில்லை. அனைத்தையும் நான் உணர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும் என நினைத்தார்” என ஜான்வி உருக்கமாக பேசியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்