ஆப்நகரம்

ஜெ., மரணம் குறித்த சந்தேகம் தீர்க்கப்படவேண்டும் : கமல் ஹாசன்

ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவரிடத்திலும் உள்ளது என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

TNN 12 Mar 2017, 10:49 pm
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவரிடத்திலும் உள்ளது என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.
Samayam Tamil jayalalitha dead kamal comments
ஜெ., மரணம் குறித்த சந்தேகம் தீர்க்கப்படவேண்டும் : கமல் ஹாசன்


தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் கமல் ஹாசன் இன்றைய அரசியல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேட்டியளித்தார். அவரது பேட்டியில், " ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவரிடத்திலும் உள்ளது. ஜெயலலிதா வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாமல் இருந்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். வாக்குகளுக்கு விலைபோகும் போது கேள்வி கேட்க முடியாது.நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வெறும் கலைஞனாக மட்டுமே தன்னால் இருக்கமுடியாது.

சாதியை எடுத்துவிடுவது தான் எனது கொள்கை, சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும். புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்யவேண்டும் . நான் அரசியலில் என்றும் அரசியல் பேசினால் மட்டுமே அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை . நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் " என்று அவர் தெரிவித்துள்ளார்.
jayalalitha dead : kamal comments

அடுத்த செய்தி

டிரெண்டிங்