ஆப்நகரம்

மீண்டும் ‘மிருதன்’ குழுவுடன் இணையும் ஜெயம் ரவி!

மீண்டும் ’மிருதன்’ படக்குழுவினருடன் இணையவுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

TOI Contributor 2 Apr 2016, 5:55 pm
மீண்டும் ’மிருதன்’ படக்குழுவினருடன் இணையவுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
Samayam Tamil jayam ravi joins hands with miruthan
மீண்டும் ‘மிருதன்’ குழுவுடன் இணையும் ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி படத்திற்கு படம் புது முயற்சியை கையாண்டு வருகிறார். இதனால் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. ‘ஜெயம்’ ரவி, அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் புதிய முயற்சியை கையிலெடுத்திருக்கிறாராம்.
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மிருதன்’ படம் ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமாக படமாக்கப்பட்டது. இப்படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சியாக எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ‘மிருதன்’ பட இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே, வித்தியாசமான கதையை கையிலெடுத்த படக்குழு, இந்த முறையும் வித்தியாசமான கதையை எடுக்கவிருக்கிறார்களாம். அதன்படி, இவர்கள் இணையும் புதிய படத்தை வான்வெளி சம்பந்தப்பட்ட கதையாக உருவாக்கவிருக்கிறார்களாம். இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என்றும், தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்