ஆப்நகரம்

விஜய்யின் சர்கார் போல் ஜெயம் ரவியின் கோமாளி படத்திற்கு வந்த சோதனை!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படம் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியுள்ள நிலையில் விஜய்யின் சர்கார் படத்தைப் போன்று இந்தப் படத்திற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 14 Aug 2019, 1:32 pm
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோமாளி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி 9க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதில் 16 வருடங்கள் கோமாவில் இருந்து நினைவு திரும்பும் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
Samayam Tamil Jayam Ravi


Also Read: தல அரசியலுக்கு வருவாரா? அர்ச்சனாவின் கேள்விகளுக்கு அஜித் போலவே பதிலளிக்கும் ரங்கராஜ் பாண்டே!

இப்படத்தின் டிரெய்லரில் ரஜினியின் அரசியல் பிரவேசம் கிண்டலடிக்கப்பட்டது பெரும் பிரச்சனையைகிளப்பியது. ஒரு வழியாக அந்தக் காட்சியை நீக்கியதோடு அப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்தப் படத்தின் கதை நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கதை என்று சொல்லப்பட்டு பிரச்சனையானது.

Also Read: 400 கலைஞர்களுக்கு தங்க மோதிரம் அன்புப் பரிசாக வழங்கிய தளபதி!

கிருஷ்ணமூர்த்தி இந்த கதையை 2014 ஆம் ஆண்டு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இவர் இயக்குனர், பார்த்திபனை ஹீரோவாக வைத்து இப்படத்தை எடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார். மேலும், கிருஷ்ணமூர்த்தியின் இந்த கதை குறித்து கோலிவுட்டில் பலருக்கும் தெரிந்திருக்கிறது.

Also Read: Nerkonda Paarvai: தல அஜித்தை மனதார பாராட்டிய ரஜினிகாந்த்!

தற்போது “கோமாளி படத்தின் கதையும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கதையும் அச்சு அடித்தாற்போல் ஒரே மாதிரி இருக்கிறது. இது தொடர்பாக எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தியின் புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ள எழுத்தாளர் சங்கம், ‘கோமாளி படத்தின் ரிலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியானது. சமீப காலமாக கதைத் திருட்டை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது எழுத்தாளர் சங்கம்.


கோமாளி பட டீமுடன் எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்கியராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து இப்பிரச்சனை விஜய்யின் சர்க்கார் பாணியில் முடித்து வைக்கப்பட்டது. கோமாளி”படத்தின் டைட்டில்காட்சியில் கதை தனக்குரியது என்று புகார் செய்த உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய பெயரை பதிவிட்டு அவருக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாக படக்குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பாக்யராஜால் தான் இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக எழுத்தாளர் சங்கத்திற்கும் பாக்யராஜ்க்கும் நன்றி தெரிவித்துள்ளார் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி.

சர்கார் இது போலவே தான் டைட்டில் கார்டில் பெயர் போடப்பட்டு பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. அந்த விசயத்திலும்பாக்யராஜ் தான் பிரச்சனையை தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்