இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளார். இதில் இரண்டு முன்னணி ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது மற்றொரு கதாப்பாத்திரத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர் முரளி கூறும் போது, நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.
மேலும் படக்குழுவினர் புகழ்பெற்ற பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் பெயர் சங்கமித்ரா என்று ஒரு வதந்தி வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க உள்ளதாகவும், ஒலிப்பதிவு ரசூல் பூக்குட்டி, கிராஃபிக்ஸ் வேலைகள் ஆர்சி கமலக்கண்ணன் செய்யவுள்ளார். படத்திற்கான தயாரிப்பு ஆயத்த வேலைகள் நடைபெற்றுவருகின்றன.
மேலும் படக்குழுவினர் புகழ்பெற்ற பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் பெயர் சங்கமித்ரா என்று ஒரு வதந்தி வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க உள்ளதாகவும், ஒலிப்பதிவு ரசூல் பூக்குட்டி, கிராஃபிக்ஸ் வேலைகள் ஆர்சி கமலக்கண்ணன் செய்யவுள்ளார். படத்திற்கான தயாரிப்பு ஆயத்த வேலைகள் நடைபெற்றுவருகின்றன.