ஆப்நகரம்

கோடிக்கணக்கில் பண மோசடி! நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மீது வழக்கு

கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மற்றும் மனைவி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

TNN 4 Apr 2017, 4:14 pm
கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மற்றும் மனைவி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil jk rithesh and his wife caught cheating case
கோடிக்கணக்கில் பண மோசடி! நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மீது வழக்கு


திருவள்ளூர் மாவட்டம் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவர் இன்று சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் திமுக எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ், போலி ஆவணம் மூலம் கிட்டத்தட்ட ரூ.2.18 கோடி மோசடி செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். இவரது உத்தரவின் பேரில் ஜே.கே.ரித்தீஷ் மற்றும் அவரது மனைவி ஜோதீஸ்வரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் கருணாஸின் கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக ஜே.கே.ரித்தீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

JK Rithesh and his wife caught cheating case

அடுத்த செய்தி

டிரெண்டிங்