மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள 'ஜாலி எல்எல்பி 2' படத்தில் நான்கு காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை படக்குழு வாபஸ் பெற்றது.
அக்ஷய் குமார் வழக்கறிஞராக நடித்துள்ள 'ஜாலி எல்எல்பி 2' திரைப்படத்தில் வழக்கறிஞர்களை கேலி செய்யும் விதமாகவும், நீதித் துறையை இழிவாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார்.
முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சமீபத்தில் தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், இப்படம் வெளியாவதற்குள் அதன் விமர்சனத்தை வெளியிடுவதா என்று படத்தை தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இதனிடையே, மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 2 வழக்கறிஞர்கள் படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குறிப்பிட்ட 4 காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் தணிக்கை செய்து படத்துக்கு புதிய சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டார்.
இதன் காரணமாக ஜாலி எல்எல்பி 2' படக்குழு தரப்பில் தாக்கல் செய்த மனுவை படக்குழுவினர் திரும்பபெற்றனர். தற்போது எந்தத் தடையுமின்றி இப்படம் வருகிற பிப்.10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
The makers of Subhash Kapoor's upcoming courtroom drama Jolly LLB 2 have withdrawn their appeal in the Supreme Court against the order of Bombay High Court that dictates them to make four cuts in the film.
அக்ஷய் குமார் வழக்கறிஞராக நடித்துள்ள 'ஜாலி எல்எல்பி 2' திரைப்படத்தில் வழக்கறிஞர்களை கேலி செய்யும் விதமாகவும், நீதித் துறையை இழிவாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார்.
முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சமீபத்தில் தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், இப்படம் வெளியாவதற்குள் அதன் விமர்சனத்தை வெளியிடுவதா என்று படத்தை தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இதனிடையே, மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 2 வழக்கறிஞர்கள் படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குறிப்பிட்ட 4 காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் தணிக்கை செய்து படத்துக்கு புதிய சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டார்.
இதன் காரணமாக ஜாலி எல்எல்பி 2' படக்குழு தரப்பில் தாக்கல் செய்த மனுவை படக்குழுவினர் திரும்பபெற்றனர். தற்போது எந்தத் தடையுமின்றி இப்படம் வருகிற பிப்.10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
The makers of Subhash Kapoor's upcoming courtroom drama Jolly LLB 2 have withdrawn their appeal in the Supreme Court against the order of Bombay High Court that dictates them to make four cuts in the film.