ஆப்நகரம்

நடிகையிடம் ரூ. 350 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் ஜானி டெப்!

நடிகையும் முன்னாள் மனைவியுமான அம்பர் ஹீர்ட்விடம் அவரது கணவர் நடிகர் ஜானி டெப், ரூ.350 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Samayam Tamil 5 Mar 2019, 1:29 pm
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அம்பர் ஹர்ட். இவரது கணவர் ஜானி டெப். இவரும் ஒரு பிரபல நடிகர் இவர் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படங்களில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். இனி இவர் பைரேட்ஸ் படங்களில் நடிக்கப்போவதில்லை என சில மாதங்கள் முன்பு வந்த அறிவிப்பு, ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
Samayam Tamil jonny-depp


இந்நிலையில் ஜானி டெப் தன் முன்னாள் மனைவி அம்பர் ஹீர்டு மீது ரூ. 350 கோடி கேட்டு நஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ளார். சில வருடங்கள் முன்பு நடிகை அம்பர் ஹீர்டு, தனது கணவர் ஜானி டெப் தன்னை வீட்டில் அடித்து துன்புறுத்துவதாக கூறி பேட்டி அளித்திருந்தார். அது உண்மையில்லை என கூறி ஜானி கோர்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகையாக இருக்கும் அம்பர் ஹீர்டு தன்னை மக்கள் மத்தியில் அதிகம் பிரபலப்படுத்தி தன் நடிப்பு கேரியரில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இப்படி வேண்டுமென்றே பொய் கூறிவருவதாக கணவர் ஜானி டெப் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்