ஆப்நகரம்

மீண்டும் காக்கிச் சட்டை அணியும் நடிகை ஜோதிகா!

பிரபல நடிகை ஜோதிகா, ‘நாச்சியார்’ படத்தை அடுத்து ‘ஜாக்பார்ட்’ என்ற படத்தில் மீண்டும் காக்கிச் சட்டை அணிந்து நடிக்கிறார்.

Samayam Tamil 2 May 2019, 2:00 pm
நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ‘நாச்சியார்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதேபோல தற்போதும் உருவாகவுள்ள ‘ஜாக்பார்ட்’ என்ற படத்திலும் மீண்டும் காக்கிச் சட்டை அணிந்து போலீஸாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil jackpot


திருமணத்திற்கு முன் சூர்யா -ஜோதிகா இணைந்து நடித்த ‘காக்க காக்க’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘உயிரிலே கலந்தது’ போன்ற படங்கள். இந்தப் படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை பெற்றது.

Jackpot: ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் - புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ்

ஆனால் திருமணத்திற்ப் பிறகும் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. இன்னும் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இருப்பினும் அவர் சூர்யாவின் தயாரிப்பில் நடித்து வருகிறார். அந்த வகையில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படத்தில் நடித்துள்ளார்.

Jyothika Vs Revathi : ஜோதிகாவுடன் இணைந்த நடிகை ரேவதி!

இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் படத்தை கல்யாண் இயக்கியுள்ளர்.

இந்த படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிகை ரேவதியும் போலீஸாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை கல்யாண் என்பவர் இயக்கவுள்ளார். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்