ஆப்நகரம்

காவிரிக்காக காலாவை தடை செய்வது சாியல்ல – திருமாவளவன் கருத்து

காவிாி பிரச்சினைக்கு குரல் கொடுத்ததற்காக காலா படத்திற்கு கா்நாடகாவில் எதிா்ப்பு தொிவிப்பது சாியானதல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 6 Jun 2018, 12:26 pm
காவிாி பிரச்சினைக்கு குரல் கொடுத்ததற்காக காலா படத்திற்கு கா்நாடகாவில் எதிா்ப்பு தொிவிப்பது சாியானதல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Thiruma Rajini


நடிகா் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா. இந்த படம் நாளை (ஜூன் 7) வெளியாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் ரஜினிகாந்த் காவிாி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவான வகையில் கருத்து தொிவித்திருந்தாா். இதனைத் தொடா்ந்து கா்நாடகாவில் ரஜினிகாந்தின் படங்கள் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிா்ப்பு தொிவித்தன.

இதன் அடிப்படையில் காலா படத்தை கா்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று திரைப்பட வா்த்தகா்கள் சங்கம் அறிவித்தது. ஆனால், அம்மாநில உயா்நீதிமன்றம் படத்தை வெளியிடலாம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு மாநில முதல்வா் உாிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

திருமாவளவன்
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் இது தொா்பாக கருத்து தொிவித்துள்ளாா். அவர் கூறுகையில், திரைப்படத்தை திரைப்படமாக பாா்க்க வேண்டும். காவிாிக்காக காலாவை எதிா்ப்பது சரியானதல்ல. காலாவை தடை செய்வதால் பல்லாயிரக்கணக்கான திரைத்துறை தொழிலாளர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தொிவித்துள்ளாா்.

130 திரையரங்குகள்
மேலும் காலா திரைப்படம் நாளை கர்நாடகாவில் சுமார் 130 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட அமைப்பினரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி விநியோகஸ்தர் கனக்புரா ஸ்ரீனிவாஸ், கர்நாடகாவில் நாளை காலா வெளியிடப்படும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்