ஆப்நகரம்

வில்லனாக மிரட்டிய கிரண், நிஜத்தில் கலை இயக்குனரா?

தனுஷ் நடிப்பில் வந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் கிரண். சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள காப்பான் படத்தில் பணியாற்றியுள்ளார்.

Samayam Tamil 22 Aug 2019, 5:00 pm
கிரண் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷை மிரட்டும் வில்லனாக அனைவர் மனதிலும் பதிந்தவர். ஆனால் அவரது முகம் அது அல்ல. அவர் ஒரு கலை இயக்குநர். கோ, மாற்றான், கவண், அனேகன், இரண்டாம் உலகம், 3 ஆகிய படங்களின் கலை இயக்குநர் இவர் தான்.
Samayam Tamil Kaappaan


அனேகன் படத்தில் நாம் பார்த்த பல இடங்கள் உண்மையானதல்ல. எல்லாம், இவர் கை வண்ணத்தில் உருவான செட்கள். எதுவும் செட் எனத் தெரியாமல் செய்து காட்டுவது தான் இவரது வேலை. கே.வி.ஆனந்தின் ஆஸ்தான கலை இயக்குநர். நடிகர் சூர்யாவின் நெருங்கிய தோழர். செல்வராகவனின் நண்பர் என இவரது ஃபுரஃபைல் பிரமிக்கத்தக்கது.

தற்போது சூர்யாவின் காப்பானில் பல நாடுகள் பயணித்து பணிபுரிந்துள்ளார் அவருடன் ஒரு சிறு உரையாடல்......நிகழ்த்தியபோது...

Also Read This: Oththa Seruppu Size 7: பாராட்டு மழையில் பார்த்திபன் மற்றும் ஒத்த செருப்பு சைஸ் 7!

மேலும் படிக்க: Bharathiraja: அரசியலுக்கு வந்தால் ரஜினி எனக்கு எதிரி - பாரதி ராஜா!!

இதையும் படிங்க: Nerkonda Paarvai: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து மகிழ்ந்த பிக் பாஸ் பிரபலம்!

கேள்வி: உங்களைப் பற்றி? நீங்கள் எப்படி இந்த துறைக்குள் வந்தீர்கள்?

பதில்: தண்டையார் பேட்டையில ஒரு மீனவ குடும்பத்தை சேர்ந்தவன் தான் நான். என்னோட அப்பா தவறிட்டாங்க. என்னோட friend வெல்விஷர், குரு எல்லாமே என் செல்ல அம்மாதான். சின்ன வயசுல இருந்தே எனக்கு படம் வரையரதுன்னா ரொம்பப் பிடிக்கும். ஏழாவது எட்டாவது படிக்கும் போது, ரஜினி சார் படம் ரிலீஸ் ஆச்சுன்னா தியேட்டர் முன்னாடி நிறைய கட் அவுட் இருக்கறத பார்ப்பேன்.

அப்போ ரஜினி சாருக்காக எதாவது பண்ணனும்னு படம் வரைய ஆரம்பிச்சேன். அப்போ எல்லாரும் பாராட்டுவாங்க. அப்பறம் வீட்டுல இருக்குற ஒரு செவுரு விடாம, எல்லாத்துலையும் ரஜினி சார் படத்த வரைஞ்சி வச்சிடுவேன்.


எனக்குசிற்பி ஆகனும், இல்லன்னா வக்கீல் ஆகணும்னுதான் ஆசை. அப்பறம் டைரக்டர் ஆகணும்னு கூட ஆசைப்பட்டேன். டிராயிங்ல ரொம்ப ஆர்வம் இருந்ததால colleage of arts சேர்ந்து படிச்சேன். அப்போதான் இந்த மாதிரி சினிமால ஆர்ட் டைரக்டர்னு ஒன்னு இருக்கறதே தெரிஞ்சிது. அதுல வேலை பார்த்தேன். ரொம்ப புடிச்சிப் போனதால இப்போ ஆர்ட் டைரக்டரா இருக்கேன்.

கேள்வி: நீங்கள் முதன் முதலில் செய்த பெரிய படம், "கோ" பற்றி?

பதில்: ஒளிப்பதிவாளர் ரத்னவேல் கூட நிறைய விளம்பர படங்கள் ஒண்ணா சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். ஒரு தடவ KV ஆனந்த் சார் என்ன கூப்பிட்டு, உன்ன எல்லாருக்கும் நல்லா தெரியணும்னா, நீ சினிமாவுல வேலை பார்க்கணும். என்னோட கோ படத்துல வொர்க் பண்றீங்களான்னு கேட்டாங்க.

இப்படிதான் எனக்கு கோ படத்துல ஆர்ட் டைரக்டரா வொர்க் பண்ண வாய்ப்பு கிடைச்சுது. சோ, அதுதான் என்னோட முதல் பெரிய படம். அதுல எல்லாமே மிகப்பிரமாண்டம். அந்தப் படம் எனக்கு நிறைய கத்துகுடுத்தது.

கேள்வி: கேவி ஆனந்துடன் உங்களுக்கு உள்ள நட்பு பற்றி?

பதில்: KV ஆனந்த் சார் பொறுத்த வரைக்கும் ஒரு செட் போட்டோம்னா,அது செட்டு மாதிரியே தெரியக் கூடாதுன்னு நினைப்பாங்க. அப்படி தெரிஞ்சிடுச்சுனா நீ தோத்து போயிட்டன்னு சொல்லுவாங்க. கவண் படத்துல வர நியூஸ் சேனல் லோகோ கூட நான் தான் ரெடி பண்ணேன்.


அதே மாதிரி கோ படத்துல வர கிளைமாக்ஸ் பைட் சீன் பாரிஸ் கார்னர்ல தான் எடுத்தோம். அங்க ஒரு வீட்டோட அமைப்பையே மாத்தி செட் போட்டிருப்போம். அது செட் மாதிரியே தெரியாது. அந்த படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச செட் வொர்க்கும் அதான்.

கேள்வி: செல்வராகவன் படங்கள் செய்தது பற்றி? அவர் எப்படிப்பட்டவர்?

பதில்: ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் KV ஆனந்த் சாரும் நல்ல நண்பர்கள். அப்போ செல்வராகவான் சார் படத்துல வொர்க் பண்ண ராம்ஜி, KV ஆனந்த் சார் கிட்ட, படம் முடிஞ்சிதுனா நான் கிரண கூட்டிக்கிட்டு போலாமான்னு கேட்டாங்க. வழக்கமா நான் எங்கேயும் ஓடிப் போயிடக் கூடாதுன்னு KV ஆனந்த் சார் அவரோட படத்துல என்ன நடிக்க வச்சிடுவாங்கா.

முதல் முறையா KV ஆனந்த் சார் என்ன கூப்பிட்டு" நீ போய் செல்வராகவன் சார் படத்துல வொர்க் பண்ணு. அவர் கூட வொர்க் பண்ணா உன்னோட லைப் ரொம்ப நல்லா இருக்கும்னு" என்ன வற்புறுத்தி செல்வா சார் படத்துல வொர்க் பண்ண வச்சார்.


அப்படிதான் இரண்டாம் உலகம் படத்தோட வாய்ப்பு கிடைச்சுது. செல்வா சார் ரொம்ப டார்ச்சர் பண்ண மாட்டார். ஒருத்தர நம்பிட்டாருனா, அவங்கள முழுசா நம்பிடுவாரு. முழுப் பொறுப்பையும் ஒப்படைச்சுடுவார்.

எதாவது வேணும்னா ரொம்ப பொறுமையா சொல்லுவாங்க. மத்தவங்கல்லாம் அப்படி இருக்க மாட்டாங்க. செல்வா சார் அவரோடஸ்கிரிப்ட்ல ரொம்ப நம்பிக்கையா இருப்பார். ஆர்டிஸ்ட் எப்படி நடிக்கறாங்கன்னு ரொம்ப நுண்ணிப்பா கவனிபபார். அவருக்கு அது தான் ரொம்ப முக்கியம்.

கேள்வி: நானும் ரௌடிதான் படத்தின் அனுபவங்கள்?

பதில்: நானும், விக்னேஷ் சிவனும் "போடா போடி" படத்துல இருந்தே அண்ணன் தம்பி மாதிரி. நானும் ரௌடிதான் படத்துல பார்த்தீங்கனா நிறைய செட் வொர்க் கிடையாது. ஆனா, அதுல நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னன்னா நயன்தாரா சின்ன வயசு வீடு, அப்பறம் விஜய் சேதுபதிக்கும் நயன்தாராவிற்கும் நடக்குற லவ், அப்பறம் கிளைமாக்ஸ்ல வர்ற பார்த்திபன் சார் வீடு. இதெல்லாம் ஒரே இடத்துல செட் போட்டதுதான். அப்பறம் அதுக்கு பின்னாடிதான் போலீஸ் ஸ்டேஷன் செட்டும் போட்டோம்.


கேள்வி: நிறைய ஹீரோக்களுடன் பணிபுரிந்துள்ளீர்கள்! அவர்கள் பற்றி?

பதில்: செல்வராகவன் சார் இயக்கத்துல தனுஷ் சார் கூட ஒரு சின்ன சீன்ல நடிச்சிருந்தேன். ஆனா அது படத்துல வரல. முதல் முறையா தனுஷ் சார் கூட நடிக்கறேன். அவரோட ஆக்டிங் பார்த்துட்டு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல மிரண்டு போயிட்டேன். அப்பறம் செல்வா சார் என் கிட்ட வந்து தனுஷ பார்க்காதீங்க நீங்க பாட்டுக்கு நடிங்கன்னு சொன்னாரு.

அந்த சீன் ரொம்ப நல்லா வந்துச்சு. ஆனா அது எடிட்டிங்ல தூக்கிட்டாங்க. அதே மாதிரி இரண்டாம் உலகத்துல ஆர்யா நண்பனா 10 நாள் சூட் போனோம். ஆனா அதுவும் படத்துல வரல. அதுக்கப்புறம் செல்வா சார் கூப்பிட்டு அடுத்த படத்துல உங்கள கண்டிப்பா நடிக்க வைக்கிறேன்னு சொல்லிருக்காரு.

சினிமால நடிக்க வாய்ப்பு கிடைச்சா நடிங்க. இங்க நடிகனுக்கு மட்டும்தான் மக்கள் கிட்ட நல்ல அங்கீகாரம் இருக்குன்னு சொல்வார். அதனால நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடிங்கன்னு செல்வா சார் சொல்லிருக்காங்க. செல்வா சார் என்ன அடுத்து எப்போ நடிக்க கூபிடுவாங்கனு காத்துகிட்டிருக்கேன்.

எனக்கு பிடிச்ச கதாநாயகன்னு சொன்னா ஆர்யாவும் ஜீவாவும். ஆர்யா எனக்கு எப்ப உடம்பு குறைக்கனும்னாலும் அவன் கிட்ட சொல்லிட்டா போதும் உடனே உடம்ப குறைக்க வச்சிடுவான். அப்பறம் ஜீவா, எனக்கு யார் போன் பண்ணாலும், ஜீவா சார் உங்களுக்கு கால் பண்ண சொன்னங்க.


நீங்க தான் அதுல நடிக்கணும்னு கட்டாயப் படுத்துவாங்க. என்ன பத்தி வெளில நிறைய பேசுவார். இவங்க ரெண்டு பேருமே ரொம்ப ஜாலியா இருக்கவங்க. கொஞ்சம் கூட சீரியசாவே இருக்க மாட்டாங்க.

கேள்வி: உங்களுக்கு சவாலான படம் எது?

பதில்: இது வரைக்கும் நான் வொர்க் பண்ண படத்துலையே அநேகன் படம் தான் ரொம்ப கஷ்டப்பட்டோம். நாங்க பர்மால எங்க ஷூட்டிங் போனாலும் எங்க கூட ஒரு ஆள் வந்துகிட்டே இருப்பாங்க. ஒரு சாங் மட்டும் தான் அங்க சூட் பண்ணோம். அதுக்கே நிறைய கோட்பாடுகள் இருந்துச்சு. ஒரு பையனும் பொண்ணும் கோவில்ல தொட்டு பேசற மாதிரி சூட் பண்ண முடியாது.

இங்க இத்தன பேரு நிக்கக் கூடாது. இவ்ளோ பேர்தான் உள்ள போக முடியும். அதனால அங்க ஷூட் பண்ண ரொம்ப கஷ்டமா இருந்தது. பர்மால வாழ்ந்த தமிழர்கள அடிச்சு தொரத்துற மாதிரி காட்சியெல்லாம் அங்க பண்ண முடியல. அப்பறம் அதே மாதிரி சென்னைல செட் போட்டு தான் அந்த காட்சிய சூட் பண்ணோம்.


கேள்வி: சூர்யா உங்களுடைய நெருங்கிய நண்பர் அல்லவா?

பதில்: சூர்யா சார் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்ட். என் மேல ரொம்ப அக்கறையா இருக்க நண்பன். என் வீட்ல கூட யாரும் சூர்யாவ நடிகனா பாக்கறது கிடையாது. நண்பனா தான் பார்க்கறாங்க. என் பசங்க கூட அவர அங்கிள்னு தான் கூப்பிடுவாங்க. அந்த அளவிற்கு எங்க குடும்பத்து கூட பழக்கம் இருக்கு.

சூர்யா சந்திச்ச பிரச்சனைகள், அவமானங்கள், என்னன்னு எனக்கு தெரியும். கூட இருந்து பார்த்துருக்கேன். அப்ப இருந்த சூர்யாவிற்கும் இப்ப இருக்குற சூர்யாவிற்கும் கிடைச்சிருக்கிற வளர்ச்சியும் புகழும் அவர இன்னும் இன்னும் மேல கொண்டு போகும்னு நம்பறேன். இப்போ நிறைய மாணவர்களுக்கு உதவி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அத நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கேள்வி: காப்பான் எப்படி வந்துள்ளது?

பதில்: நிச்சயமா காப்பான் திரைப்படம் எல்லாரையும் உற்சாகப்படுத்துற படமா இருக்கும். இந்த படம் "அயன்" மாதிரி ரொம்ப விறுவிறுப்பா திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கு. அயன், கோ படத்த மக்கள் எந்த அளவிற்கு ரசிச்சாங்களோ,அதவிட இந்த "காப்பான்" சிறப்பான படம்.

அனைத்து மக்களையும் திருப்திபடுத்தும்னு சொல்லலாம். கீழ்தட்டு மக்கள இருந்து மேல் தட்டு மக்கள் வரைக்கும் அனைவரையும் சிந்திக்க வைக்கும் படமாவும் இருக்கும். இந்த படத்த எல்லாரும் ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடியும். இந்த படம் நிச்சயமா யாரையும் ஏமாத்தாதுன்னு சொல்ல முடியும். என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்