ஆப்நகரம்

தொடரும் சிக்கல்: நாளை காப்பான் படம் வெளியாகுமா?

காப்பான் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால், நாளை படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 11:00 am
சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்த படத்தின் கதை என்னுடையது என்று குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
Samayam Tamil suriya


அவர் தனது மனுவில் கூறியிருந்ததாவது, 'கடந்த 2016ம் ஆண்டு சரவெடி என்று பெயரிட்டுள்ள என் படத்தின் கதையை இயக்குநர் கே.வி. ஆனந்த்திடம் கூறினேன். அந்த கதை பிடித்து இருந்ததால் எதிர்காலத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறினார். பின்னர் தற்போது அந்த கதையை காப்பான் என்ற பெயரில் எடுத்துள்ளார். அதனால் அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், படத்தின் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

சிக்கலில் மாட்டி கொண்ட காப்பான்


இதை ஏற்க மறுத்த ஜான் சார்லஸ் மேல்முறையீடு செய்து மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, 'என் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது. தொடர்ந்து இது போன்று காப்பான் படத்திற்குச் சிக்கல் ஏற்படுவதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் இந்த பிரச்சனை தீர்ந்து நாளை படம் வெளியாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்