ஆப்நகரம்

நிறைவடைந்தது ‘காஸ்மோரா’ படப்பிடிப்பு:இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

கோகுல் இயக்கத்தில் கார்த்தி,நயன்தாரா,ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ’காஸ்மோரா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

TNN 14 Jun 2016, 3:11 pm
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ’என்ற வெற்றிப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கோகுலில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’காஸ்மோரா’.கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
Samayam Tamil kaashmora completed shooting
நிறைவடைந்தது ‘காஸ்மோரா’ படப்பிடிப்பு:இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்


அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. சுமார் 60 கோடி ரூபாய் வரை செலவு செய்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மிகப்பிரம்மாண்ட முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#Kaashmora seemed impossible. We still pursued it. Happy to share we have completed shooting. Thank you @prabhu_sr and Dir Gokul(1/2)— Actor Karthi (@Karthi_Offl) June 12, 2016

”காஸ்மோரா திரைப்படம் சாத்தியமற்றது என்றுதான் நினைத்திருந்தோம்.ஆனால் விடாமுயற்சியுடன் அதை நிறைவேற்றிவிட்டோம்.காஸ்மோரா படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”என கார்த்தி தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் காஸ்மோரா திரைப்படம், கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்