ஆப்நகரம்

சமந்தாவிற்கு மெல்போர்ன் விருது: கேக் வெட்டி கொண்டாடிய 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினர்!

சம்ந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான மெல்போர்ன் விருது அறிவிக்கப்பட்டதை 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Samayam Tamil 23 Aug 2021, 10:49 am
அண்மையில் நடைபெற்ற மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது சூரரைப் போற்று படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், வெப் சீரிஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திற்கான விருது நடிகை சமந்தா அக்கினேனிக்கும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு விருது அறிவிக்கப்பட்டதை 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
Samayam Tamil காத்து வாக்குல ரெண்டு காதல்
காத்து வாக்குல ரெண்டு காதல்


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஓடிடி ரிலீசாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான 'தி பேமிலி மேன் 2' வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இந்த வெப் சீரிஸ் தமிழ் ரசிகர்களிடையே பலவித சர்ச்சைகளை கிளப்பினாலும், சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந் இந்த வெப் சீரிஸில் ராஜி எனும் தற்கொலைப் படையை சேர்ந்த நபராக நடித்திருந்தார் சமந்தா. தமிழர்களை தவறாக இந்த வெப் சீரிஸ் சித்தரித்திருப்பதா பலவித சர்ச்சைகள் எழுந்தன. இந்த சீரிஸில் நடித்ததிற்காக சமந்தாவிற்கு எதிராகவும் பலர் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இந்த சீரிஸிற்காக சிறந்த நடிகைக்கான மெல்போர்ன் விருது சம்ந்தாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோட்டுக் கடையில் மீன் பொறித்து மகிழ்ந்த அருண் விஜய்: தாயின் அன்பை நினைத்து நெகிழ்ச்சி!
இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு மெல்போர்ன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்