ஆப்நகரம்

காவலன் ரூ.5 கோடி நஷ்டம்: பண மோசடி புகாருக்கு தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் பதில்

பணம் வாங்கி ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் போலீஸ் பற்றி சக்தி சிதம்பரம் விளக்கம் அளித்திருக்கிறார்.

Samayam Tamil 11 Sep 2020, 4:26 pm
விஜய் நடிப்பில் 2011 இல் வெளிவந்த படம் காவலன். சித்திக் இதனை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு நல்ல விமர்சனமும் கிடைத்தது. மலையாளத்தில் திலீப் மற்றும் நயன்தாரா நடித்த பாடிகார்டு என்ற படத்தின் ரீமேக் தான் காவலன். இந்த படத்தில் ஹீரோயினாக அசின் நடித்து இருந்தார்.
Samayam Tamil Kaavalan


இந்த படத்தின் விநியோக உரிமையை தருவதாகக் கூறி தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் தன்னிடம் 24 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு திரும்ப தரவில்லை என சுந்தர் என்பவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக சக்தி சிதம்பரம் போனில் மிரட்டியதாகவும் சுந்தர் கூறி உள்ளார். இதனால் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி சக்தி சிதம்பரத்திற்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த புகார் தொடர்பாக சக்தி சிதம்பரம் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.

சக்தி சிதம்பரம் காவலன் படத்தின் வினியோக உரிமையை பெற்றிருந்தார். சக்தி சிதம்பரத்தின் முந்தைய படனமான குரு சிஷ்யன் தோல்வி அடைந்ததால், அந்த படத்தின் நஷ்டத்தை செட்டில் செய்யும்படி காவலன் ரிலீஸ் நேரத்தில் விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். அதனால் காவலன் கடைசி நேரம் வரை சர்ச்சையை சந்தித்தது. அதன் பிறகு விஜய் தலையிட்டு தான் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அது மட்டுமின்றி சுறா படத்தின் மூலம் ஏற்பட்ட 10 கோடி ருபாய் நஷ்டத்தையும் ஈடுகட்ட வேண்டும் என சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் அதற்கு முன்பு விஜய்க்கு தலைவலி கொடுத்து இருந்தனர்.

2011 பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் அரசியல் பிரச்சனை காரணமாக காட்சிகள் குறைக்கப்பட்டது. இது போன்ற சர்ச்சைகளால் இந்த படத்திற்கு 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது என சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஐந்தரை கோடி ஒரு பிரபல டிவி நிறுவனத்திற்கு விற்று இருப்பதாக சக்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.

ஆனால் அவர்களிடம் இருந்து தற்போது வரை பாதி அளவு தொகை மட்டுமே வந்திருக்கிறது, மீது தொகைக்காக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கு முடிந்ததும் பணத்தை வாங்கி சுந்தர் மற்றும் மற்றவர்களுக்கு கடனை செட்டில் செய்வேன் என சக்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.

தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதை மறைத்து காவல் நிலையத்தில் சுந்தர் புகார் பதிவு செய்திருப்பதாக சக்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். அவரது குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறது என்று கூறி தன்னிடம் பணம் பெற்றதாகவும் சக்தி தந்திரம் கூறியிருக்கிறார். காவலன் படம் பற்றிய வழக்கு பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அது முடிந்த பிறகு நிச்சயம் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவேன் என்று சுந்தருக்கு சக்தி சிதம்பரம் பதில் கூறியிருக்கிறார்.

காவலன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த பல்வேறு படங்களும் பல்வேறு காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கை ஆகி விட்டது . கத்தி, மெர்சல், சர்க்கார் என அவரது பல படங்கள் அதிகம் அரசியல் எதிர்ப்பையும் சந்தித்து இருக்கின்றன. அவற்றில் விஜய் பேசும் சில அரசியல் வசனங்கள் தான் அதற்கு காரணம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்