ஆப்நகரம்

மூன்றாவது முறையாக அம்மாவாகும் ரம்பா!

இரண்டு குழந்தையைப் பெற்ற பிரபல நடிகை ரம்பா, தற்போ மூன்றாவது முறையாக அம்மாவாகப் போகிறார்.

Samayam Tamil 25 May 2018, 6:26 pm
இரண்டு குழந்தையைப் பெற்ற பிரபல நடிகை ரம்பா, தற்போ மூன்றாவது முறையாக அம்மாவாகப் போகிறார்.
Samayam Tamil rambha


தமிழில் ‘உழவன்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதையடுத்து ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘ஆனந்தம்’, ‘த்ரிரோஸஸ்’, ‘பெண் சிங்கம்’ உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவரை தமிழ் ரசிகர்கள் ‘தொடை அழகி ரம்பா’ என்று செல்லமாக அழைத்து வந்தனர்.

பட வாய்ப்பு குறைந்ததும், தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ரம்பா. திருமணத்துக்கு பிறகு நியூயார்க்கில் கணவருடன் வாழ்ந்து வந்தார். ரம்பாவுக்கு லாவண்யா, சாஷா என 2 மகள்கள் உள்ளனர். சமீபத்தில் கணவரிடமிருந்து விவாகரத்துகோரி திடீரென்று வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவரே வாபஸ் பெற்று தற்போது கணவருடன் வாழ்ந்த வருகிறார்.

இந்நிலையில் ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். கர்ப்பமாக தோன்றும் அதில், ‘3வது குழந்தைக்கு தாய் ஆகும் சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துகொள்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்