ஆப்நகரம்

ரசிகர்களிடம் உஷாராக இருக்கும் காஜல்அகர்வால்!

தன்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளும் ரசிகர்களிடம் உஷாராக இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

TNN 14 Mar 2017, 3:09 pm
தன்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளும் ரசிகர்களிடம் உஷாராக இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
Samayam Tamil kajal agarwal be alret with fans
ரசிகர்களிடம் உஷாராக இருக்கும் காஜல்அகர்வால்!


நடிகை காஜல் அகர்வால் அஜீத்துடன் ‘விவேகம்’ படத்திலும், விஜய்யின் 61வது படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் ‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக அந்தப் பகுதியில் மழை பெய்ததால் காஜல்அகர்வால், ஆடிப்பாடும் பாடல் காட்சியொன்றை நிஜமான மழையிலேயே படமாக்கியிருக்கிறார்கள்.

மேலும், முன்பெல்லாம் அவுட்டோர் படப்பிடிப்புக்குச் சென்றால், அங்கு தன்னை பார்க்க வரும் ரசிகர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் காஜல் அகர்வால். இப்போது யாரையுமே தன்னிடம் நெருங்க விடுவதில்லையாம்.

காரணம், ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்பவர்கள், பின்னர் அந்தப் போட்டோவை தப்பாக பயன்படுத்தி இணையதளத்தில் வெளியிடுகிறார்களாம். இப்படி பலமுறை நடந்துள்ளதாம். அதனால், இனிமேல் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வதில்லை என்ற கொள்கையில் உஷாராக இருக்கிறாராம் காஜல் அகர்வால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்