ஆப்நகரம்

திருமணத்திற்குப் பின் நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகை!

திருமணத்திற்குப் பின் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

TOI Contributor 14 Sep 2016, 4:39 pm
திருமணத்திற்குப் பின் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
Samayam Tamil kajal agarwal doesnt want to act after her marriage
திருமணத்திற்குப் பின் நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகை!


திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். காஜலுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் தன் திருமணம் பற்றி காஜல் அகர்வால் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், “திருமணத்துக்கு பின் நான் சினிமாவில் இருந்து விலகிவிடுவேன். குடும்பப் பொறுப்புகள் அதிகம் வந்தவிடும். திருமணத்திற்குப் பிறகு கணவனுக்கு நல்ல மனைவியாகவும், என் குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும், அவரது குடும்பத்திற்கு நல்ல மருமகளாகவும் இருப்பேன். திருமணத்திற்குப்பிறகு இப்படியாக நிறைய பொறுப்புகளை வைத்துக்கொண்டு சினிமாவில் நடிப்பது முடியாத காரியம். எனவே திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்கமாட்டேன். இதுநாள் வரை எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் அனைத்திலும் நடித்துவிட்டேன். தற்போது தாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் மட்டும் நடித்து வருகிறேன். கடவுள் எனக்கு எப்போது திருமண பந்ததத்தை கொடுக்கிறாரோ அப்போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கிவிடுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்