ஆப்நகரம்

மகா சிவராத்திரியை சத்குருவின் யோகா மையத்தில் கொண்டாடிய காஜல்

நூலிழையில் உயிர் பிழைத்த காஜல் அகர்வால் மகா சிவராத்திரியை கோவையில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் கொண்டாடியுள்ளார்.

Samayam Tamil 23 Feb 2020, 2:35 pm
நூலிழையில் உயிர் பிழைத்த காஜல் அகர்வால் மகா சிவராத்திரியை கோவையில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் கொண்டாடியுள்ளார்.
Samayam Tamil kajal aggarwal celebrates maha shivaratri at isha yoga centre
மகா சிவராத்திரியை சத்குருவின் யோகா மையத்தில் கொண்டாடிய காஜல்


கிரேன் விபத்து

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்தபோது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிர் இழந்தனர். கிரேன் விழுந்த அந்த இடத்தில் தான் கமல் ஹாஸனும், காஜல் அகர்வாலும் இருந்துள்ளனர். கிரேன் விழுவதற்கு சில நொடிகளுக்கு முன்பே அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். கிரேன் விழுந்ததை பார்த்து கமலும், காஜலும் கீழே விழுந்துள்ளனர்.

மகா சிவராத்திரி

கண் இமைக்கும் நேரத்தில் உயிர் பிழைத்ததால் காஜல் அகர்வால் அதிர்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் அவர் மகா சிவராத்திரியை கொண்டாட கோவையில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தியானம் செய்திருக்கிறார். மகா சிவராத்திரி கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தை காஜல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

காஜல் அகர்வால்

கடந்த ஆண்டு மகா சிவராத்திரியின்போது தனது தங்கை மற்றும் குடும்பத்துடன் கோவைக்கு சென்றார் காஜல். அங்கு அவர், தங்கை நிஷா, நடிகைகள் அதிதி ராவ் ஹைதரி, தமன்னா உள்ளிட்டோர் நடனம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது. சத்குரு மையத்திற்கு வந்தது மகிழ்ச்சி என்றும், அதை ஆசிர்வாதமாக நினைப்பதாகவும் காஜல் தெரிவித்துள்ளார்.

நிக்கி கல்ராணி

இந்த ஆண்டு மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் காஜல் மட்டும் அல்ல நடிகை நிக்கி கல்ராணியும் கலந்து கொண்டார். அவரும் யோகா மையத்தில் தியானம் செய்திருக்கிறார். இந்தியன் 2 சம்பவத்திற்கு பிறகு நேரத்தின் அருமை புரிந்துள்ளதாக காஜல் தெரிவித்துள்ளார். அக்கா நூலிழையில் உயிர் பிழைத்ததை பார்த்து தங்கை நிஷாவும் அதிர்ச்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்