ஆப்நகரம்

தேனிலவில் போய், என்னமா காஜல் இப்படி பண்றீங்களேமா

காஜல் அகர்வால் தேனிலவுக்கு சென்ற இடத்தில் யோகா செய்ததை பார்த்தவர்கள் இப்படித் தான் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Samayam Tamil 12 Nov 2020, 1:22 pm
காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. மும்பையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
Samayam Tamil kajal aggarwal


கொரோனா வைரஸ் பிரச்சனையால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றார் காஜல். திருமணமான மறுநாள் தன் கணவருடன் புது வீட்டில் குடியேறினார். அதன் பிறகு கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் காஜல்.

மாலத்தீவுகளில் காஜலின் போட்டோகிராஃபராகிவிட்டார் கவுதம் கிட்ச்லு. சும்மா சொல்லக் கூடாது, காஜலை அழகாக புகைப்படம் எடுக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். எப்பொழுது பார்த்தாலும் வேலை, ஒர்க்அவுட், யோகா என்று பிசியாக இருந்த காஜல் அகர்வாலால் மாலத்தீவுகளில் சும்மா இருக்க முடியவில்லை.
View this post on Instagram In a desperate attempt to resume routine 🧘🏻‍♀️ A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on Nov 11, 2020 at 1:11am PST
இதையடுத்து யோகா செய்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் காஜல். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

என்னமா காஜல், தேனிலவில் போய் யோகா, ஒர்க்அவுட்டுனு அநியாயம் பண்றீங்களே. கணவருடன் நேரம் செலவிடுங்கள். அந்த மனிதர் பாவம், போட்டோ எடுத்தே அலுத்துப் போய்விடுவார் போன்று. மும்பை வந்த பிறகு யோகா செய்யலாம். தற்போது கவுதமுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

நீங்கள் ஃபிட்னஸ் ஃப்ரீக் என்று தெரியும். ஆனால் இதெல்லாம் டூ மச் என்று தெரிவித்துள்ளனர்.

காஜல் கணவருக்கு கைவசம் ஒரு தொழில் இருக்கு

கவுதம் கிட்ச்லு எடுக்கும் புகைப்படங்களை பார்க்கும் காஜல் அகர்வாலின் ரசிகர்கள் அவருக்கு கைவசம் ஒரு புதுத் தொழில் இருப்பதாக பாராட்டியுள்ளனர். முன்னதாக காஜல் தனக்கு திருமணமான மூன்றாவது நாள் கொரோனா வைரஸ் பிரச்சனை தொடர்பாக நோ சொல்லி ட்வீட் போட்டார்.

அதை பார்த்தவர்கள் காஜல், தன் கணவருக்கு தான் நோ சொல்லிவிட்டாரோ என்று முதலில் தவறாக நினைத்துவிட்டனர். முழு ட்வீட்டையும் படித்துப் பார்த்த பிறகு, இத்தனை நாட்களாக இல்லாத அக்கறை திடீர்னு என்ன என்று கேட்டார்கள். தேனிலவுக்கு சென்றபோது yes சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டார் காஜல். அந்த வீடியோவை பார்த்தவர்கள், இது காஜல் விளம்பரத்திற்காக செய்வது போன்று தெரிகிறது. யாரோ பணம் கொடுத்து சொல்லச் சொல்வதை செய்கிறார் என்றார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்