ஆப்நகரம்

திருமணமான 3வது நாளே 'நோ' சொன்ன காஜல் அகர்வால்

திருமணம் முடிந்த வேகத்தில் காஜல் அகர்வால் 'நோ' சொல்லியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Samayam Tamil 4 Nov 2020, 4:05 pm
காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த 30ம் தேதி மாலை மும்பையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
Samayam Tamil kajal aggarwal


திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான நபர்களே கலந்து கொண்டார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்று காஜல் தெரிவித்தார்.

கல்யாணமான ஒரே நாளில் காஜல் இப்படி ஆகிட்டாரே!!!

திருமணம் முடிந்த மறுநாள் காஜலும், கவுதமும் புது வீட்டில் குடியேறினார்கள். புதுவீட்டில் காஜல் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை கவுதம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்நிலையில் காஜல் அகர்வால் நோ சொல்லி சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
I SAY NO என்று காஜல் அகர்வால் 'நோ' சொன்னதை பார்த்தவர்கள் அவருக்கும், கவுதம் கிட்ச்லுவுக்கும் இடையே தான் பிரச்சனை போன்று என நினைத்துவிட்டனர். தொடர்ந்து போஸ்ட்டை படித்தபோது தான் அது கவுதம் கிட்ச்லு பற்றி அல்ல மாறாக கொரோனா வைரஸ் பற்றி என்பதை தெரிந்து கொண்டனர்.

ஒரு சின்ன வைரஸ் இப்படி என் கருத்தை மாற்றும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத எதிரி, மருந்து இருக்கிறதா என்பது உறுதி இல்லை, உலக மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள், இதை எல்லாம் பார்க்கும் போது வாழ்க்கை தொடர்பான என் பார்வையை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. தற்போதுள்ள நிலைக்கு நான் நோ சொல்கிறேன். நீடிக்கும் அச்சத்திற்கு நோ சொல்கிறேன் என்று காஜல் தெரிவித்துள்ளார்.

காஜலின் போஸ்ட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

ஏம்மா கல்யாணம் முடிந்த கையோடு போடும் போஸ்ட்டா இது?. உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?. நீங்கள் என்ன போஸ்ட் செய்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து தான் செய்தீர்களா?.

சும்மா எதையாவது போஸ்ட் போடாமல் குடும்பத்தை கவனியுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவும் கொரோனா வைரஸ் குறித்து போஸ்ட் போட்டபோது I Retire என்று தெரிவித்தார். அவர் கொரோனா வைரஸ் பற்றி பேச சிலரோ, சிந்து பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஒரேயடியாக ஓய்வு பெறுகிறார் என்று அவசரப்பட்டு தவறாக நினைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்