ஆப்நகரம்

”ரஜினியால் வாழ்ந்தவர்கள்... இன்று அவரை விமர்சிக்கிறார்கள்”காலா விழாவில் தனுஷ் கவலை

ரஜினியை விமர்சித்தே சிலர் உச்சத்திற்கு வர நினைக்கிறார்கள் என 'காலா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசினார்.

Samayam Tamil 9 May 2018, 10:02 pm
ரஜினியை விமர்சித்தே சிலர் உச்சத்திற்கு வர நினைக்கிறார்கள் என 'காலா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசினார்.
Samayam Tamil Dhanush_Speech_in_kaala_audio_launch
ரஜினியை விமர்சித்தே சிலர் உச்சம் தொட நினைக்கிறார்கள்: தனுஷ்


ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காலா’. வரும் ஜூன் 7ம் தேதி வெளிவரும் இந்த படத்தில் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அப்போது பேசிய ’காலா’ பட தயாரிப்பாளர் தனுஷ், ரஜினிகாந்த் மீதான அரசியல் கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தனது உரையை தொடங்கினார்.

உச்சத்தில் இருப்பவர்களை விமர்சித்தால் தாங்களும் உச்சத்திற்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். ரஜினியால் வாழ்ந்தவர்கள், தற்போது அவரைப்பற்றிய விமர்சன கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்றார் நடிகர் தனுஷ்.

தொடர்ந்து அவர் பேசுகையில், காலா படத்திற்கான இசை வெளியீட்டு விழா அழைப்பிதழை அனைவருக்கும் ரஜினி கொடுக்கச்சொன்னார். அதில் அவரை விமர்சித்தவர்களும் அடங்குவர். இதுதான் ரஜினியின் பெருந்தன்மை என்று நடிகர் தனுஷ் பேசினார்.

துணை கதாபாத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கி, வில்லன்... ஹீரோ.... ஸ்டைல் ஹீரொ.... பிறகு சூப்பர்ஸ்டார்... தற்போது தலைவர் என படிப்படியாக ரஜினி உயர்ந்துக்கொண்டே உள்ளார். நாளை அவர் யார் என்பதை அறிய நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன் என்று தனுஷ் தனது உரையை முடித்தபோது ஒய்.எம்.சி.ஏ அரங்கமே கரவொலி

அடுத்த செய்தி

டிரெண்டிங்