ஆப்நகரம்

”காலா... மக்களில் ஒருவருடைய படம்” பா. ரஞ்சித்

‘காலா’ இசை வெளியீட்டில் பேசிய ரஞ்சித், ரஜினி அளித்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தபின் ‘காலா’ திரைப்படம் மனித மாண்பை மீட்டெடுக்கும், மக்களுக்கான அரசியல் பேசும் படம் என தெரிவித்தார்.

Samayam Tamil 9 May 2018, 9:39 pm
‘காலா’ இசை வெளியீட்டில் பேசிய ரஞ்சித், ரஜினி அளித்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தபின் ‘காலா’ திரைப்படம் மனித மாண்பை மீட்டெடுக்கும், மக்களுக்கான அரசியல் பேசும் படம் என தெரிவித்தார்.
Samayam Tamil pa-ranjith-kaala-speech
”காலா... மக்களில் ஒருவருடைய படம்” பா. ரஞ்சித்


இதுகுறித்து அவர், “கபாலி படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. அந்த பயத்தில் இருந்து என்னை மீட்டெடுத்தவர் ரஜினி, மீண்டும் ஒரு வாய்ப்பை தந்து என் பயத்தை நீக்கினார். நான் நேரில் பார்த்து பழகிய ரஜினியின் பவரை இதில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக நினைக்கிறேன். ரஜினியின் குரல் பவர்புல்லானது, அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் உருவானதே தொழிலாளர்களால் தான், இது மக்களுக்கான படம், மக்களுடைய படம், மக்களில் ஒருவருடைய படம், மக்களுக்கான அரசியல் பேசும் படம். மனித மாண்பை மீட்டெடுக்கும் போராட்டம் தான் இங்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. ‘காலா’ மனித மாண்பை மீட்டெடுக்கும் திரைப்படமாக உருவாயிருக்கிறது என நம்புகிறேன்” என பேசினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்