ஆப்நகரம்

தன் மகளை மருத்துவராக்க ஆசைப்பட்ட கலாபவன் மணி!

மறைந்த கலாபவன் மணி தன் மகளை ஒரு மருத்துவராக்க ஆசைப்பட்டாராம்.

Samayam Tamil 29 May 2018, 5:45 pm
மறைந்த கலாபவன் மணி தன் மகளை ஒரு மருத்துவராக்க ஆசைப்பட்டாராம்.
Samayam Tamil kalabavan mani


மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் எல்லா வேடங்களிலும் கலக்கி வந்தவர் கலாபவன் மணி. இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.

இவர் 2016ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வழக்குகள் நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் கலாபவன் மணியின் மகள் ஸ்ரீலக்ஷ்மி 12ம் வகுப்பை முடித்து விட்டார். இதுகுறித்து கலாபவனின் அண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘‘மணிக்கு அவரது மகளை மிகவும் பிடிக்கும். 10ம் வகுப்பில் அவள் நிறைய மதிப்பெண் எடுத்ததால் காரை பரிசாக வழங்கினார்.

இப்போது ஸ்ரீலஷ்மி 12ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார். மகளை ஒரு மருத்துவராக ஆக்க வேண்டும் என்பது அவரது ஆசை, மருத்துவமனை கட்டவும் விரும்பினார். தற்போது மகள் +12வை முடித்து விட்டார்.. மணியை போல் மகள் ஸ்ரீலக்ஷமியும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டு வளரவேண்டும்’’ என்று வாழ்த்துவதாக பதிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்