ஆப்நகரம்

விஷாலின் வண்டவாளத்தை வெளியிடுவேன்: கலைப்புலி எஸ் தாணு பகீர் தகவல்

தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பளர்களை தெருவில் நிறுத்தியவர் நடிகர் விஷால் என்று கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளா

TNN 30 Mar 2017, 10:04 pm
தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பளர்களை தெருவில் நிறுத்தியவர் நடிகர் விஷால் என்று கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kalaipuli s thaanu exposes vishal atrocity against producer in chennai
விஷாலின் வண்டவாளத்தை வெளியிடுவேன்: கலைப்புலி எஸ் தாணு பகீர் தகவல்


வரும் 2ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்கயிருக்கிறது. இத்தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ள 'தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி' சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் ஆய்வுக் கூடத்தின் திரையரங்கில் நடைபெற்றது. இதில், எதிர் அணியிலிருந்த கலைப்புலி ஜி சேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் திருப்பமாகப் போட்டியிலிருந்து விலகி முன்னேற்ற அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ். தாணு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நான் இன்று இங்கே நிற்கக் காரணம் கலைப்புலி ஜி.சேகரன் தான். அவர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

அவர் எவ்வளவோ கதைகள் கூறுவார் 'பொல்லாத ஊரு' என்ற கதையை இப்போது எடுத்தாலும் ஓடும். விஷால் இதில் நடித்தால் ஒரு வெற்றிப்படமாவது கிடைக்கும். விஷாலை வைத்து படமெடுத்த 12 தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். உதாரணமாக 'சமர்' படம் எடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடுவின் அனுபவத்தைக் கேளுங்கள் (தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு ஊடகங்கள் முன் பேசவிட்டார். ரமேஷ் நாயுடு பேசும் போது- " நான் 'சமர்' படத்தின் தயாரிப்பளர் பேசுகிறேன். அன்று 'சமர்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பாண்டிச்சேரியில் படமாகிக் கொண்டிருந்தது. கனல் கண்ணன் தான் ஸ்டண்ட் மாஸ்டர். படப்பிடிப்பின் இறுதிநாளில் பூசணிக்காய் உடைக்க வேண்டும் என்பதால் நான் மதிய உணவு இடைவேளையின் போது என் மனைவி, மகன் என்று குடும்பத்துடன் அங்கே போனேன்.

ஆனால், தயாரிப்பாளர் வந்தால், நான் நடிக்க மாட்டேன் என்று கூறி அங்கிருந்து கிளம்பி விட்டார். அதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. நான் படப்பிடிப்புக்கு வரக் கூடாதாம். அந்த ஒரு படத்தோடு தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன். எனக்கு நேர்ந்த அவமானம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது.'' என்றார் குமுறலுடன்) பிறகு தாணு தொடர்ந்து பேசும் போது, ''பார்த்தீர்களா ஒரு தயாரிப்பாளரின் நிலமையை? விஷால் இது என்ன கேலிக் கூத்து?

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ரூ.4 கோடி பட்ஜெட்டாம். படம் ரூ.21 கோடி ரூபாய் வியாபாரமாம். 17 கோடி லாபமாம். இதை வைத்து யாருக்கு உதவி செய்யப் போகிறார்? தயாரிப்பாளர்களை நாடக நடிகர்கள் என்று நினைத்தாயா? விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. போட்டோ ஆதாரத்துடன் 1ம் தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்