ஆப்நகரம்

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற ‘கலக்கப் போவது யாரு’ பிரபலம் கைது!

விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நவீன், தனது முதல திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ய முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 13 Jun 2018, 12:05 pm
விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நவீன், தனது முதல திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ய முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil Naveen
கலக்கப் போவது யாரு நவீன்


சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் நவீன். இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்போது இவர் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது. இது ஒரு காதல் திருமணம்.

ஆனால் தற்போது நவீன் தனது முதல் திருமணத்தை மறைத்து மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ய முடிவு செய்து, அவர்களுக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதனையறிந்த நவீனின் முதல் மனைவி திவ்யா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து நேற்று நவீனின் இரண்டாவது திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் நவீனை போலீசார் கைது சென்று விசாரித்து வருகின்றனர்.

Kalakka Povathu Yaaru participant Naveen arrested for illegal second marriage.

அடுத்த செய்தி

டிரெண்டிங்