ஆப்நகரம்

பணத்திற்காக எதையும் செய்யும் கமலை கைது செய்ய வேண்டும் - அமைச்சர் சிவி சண்முகம்

கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என விழுப்புரத்தில் அமைச்சர் சி வி சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

TNN 16 Jul 2017, 10:00 am
விழுப்புரம் : கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என விழுப்புரத்தில் அமைச்சர் சி வி சண்முகம் பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil kamal anything do for money cv shanmugam
பணத்திற்காக எதையும் செய்யும் கமலை கைது செய்ய வேண்டும் - அமைச்சர் சிவி சண்முகம்


பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல பிரச்னைகளை எதிர் கொண்டு வருகின்றது. அதை விட அதை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் மீது பல குற்றச்சாட்டுகளை வைக்கப்படுகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சி பிரச்னை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தும் பேசிய கமல், மலையாள நடிகை பலத்காரம் தொடர்பாகவும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் லஞ்சம், ஊழல் உள்ளது என பேசினார்.

இதையடுத்து கமல் மீது மேலும் கடுப்பாகியுள்ள தமிழக அமைச்சர்கள், கமல் மீது சரமாரியாக புகாரை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு:
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், நடிகர் கமல் ஹாசன் ஒழுங்காக வருமான வரி செலுத்துகிறாரா? சோதித்து பார்க்கட்டுமா? என்று கேள்வி எழுப்பினார். மாநில அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை, நடிகர் கமல் முதலில் நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சிவி சண்முகம் குற்றச்சாட்டு:
சமுதாயத்தில் பின் தங்கியவர்களை தரம் தாழ்த்தி பேசிய கமல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்