ஆப்நகரம்

இந்தியன் 2 விபத்து, CBI முன் ஆஜரான கமல்ஹாசன்: என்ன சொல்லியிருப்பாரோ?

இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் நடந்த விபத்து பற்றிய விசாரணைக்காக நடிகர் கமல்ஹாசன் நேரில் இன்று ஆஜராகி தன் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

Samayam Tamil 3 Mar 2020, 4:06 pm
ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வரும் படம் இந்தியன் 2. சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துவந்தபோது கடந்த பிப்ரவரி 19ம் தேதி எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.
Samayam Tamil Kamalhaasan appears before CBI for investigation on Indian 2


அதிக எடை கொண்ட விளக்குகள் வைக்கப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்ததில் 3 படக்குழுவினர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த விபத்தில் இறந்தவர்களுக்கு கமல் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளித்துள்ளார். ஷங்கர் ஒரு கோடி ரூபாயும், லைகா நிறுவனம் 2 கோடி ரூபாயும் இழப்பீடாக வழங்கினர். மேலும் இந்த விபத்து பற்றிய வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்ற வாரம் இயக்குனர் ஷங்கரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் இரண்டரை மணி நேரத்திற்க்கும் அதிகமாக விசாரணை நடைபெற்றது.

முதலில் சென்னை நஸ்ரத்பேட்டை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். ஆனால் அதன் பிறகு அது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று கமல்ஹாசன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். அதை ஏற்று கமல் விசாரணை அதிகாரி நாகஜோதி முன்பு ஆஜராகி உள்ளார். அரசியல் கட்சி நடத்திவரும் கமல் அங்கு வரும்போது தன் தொண்டர்களுடன் கூட்டமாக வந்திறங்கியுள்ளார்.

இதற்குமுன்பு படக்குழுவினர் மற்றும் கிரேனை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசன் மற்றும் லைகா நிறுவனம் இடையே உரசல் நீடித்து வரும் இந்த நிலையில், தற்போது கமல் விசாரணையில் என்ன கூறுவார் என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்