ஆப்நகரம்

உம்மா வேணும், உம்மா வேணும் என்று ஆரவ்விடம் கெஞ்சிய ஓவியா!

எனக்கு உம்மா கொடு, உம்மா கொடு என்று ஆரவ்வை கதற கதற ஓடவிட்டுள்ளார் ஓவியா.

TNN 2 Aug 2017, 12:00 pm
எனக்கு உம்மா கொடு, உம்மா கொடு என்று ஆரவ்வை கதற கதற ஓடவிட்டுள்ளார் ஓவியா.
Samayam Tamil kamal haasan bigg boss tamil episode 37 updates
உம்மா வேணும், உம்மா வேணும் என்று ஆரவ்விடம் கெஞ்சிய ஓவியா!


பிக்பாஸ் குடும்பத்தில் மற்ற யாரும் இல்லாத அளவிற்கு ஆரவ் மேல் ஓவியா உயிராக இருக்கிறார். நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூட ஆரவ்விடம் தன்னை காதலை தெரியப்படுத்தியிருக்கிறார் ஓவியா. வழக்கம்போல் எபிசோடு 37லிலும், பிக்பாஸ் குடும்பம் கலகலப்பாக காரசாரம் சென்றுள்ளது. உண்மையில் சொல்லப்போனால், பிக்பாஸ் குடும்பம், லூசு குடும்பமாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் பைத்தியமாக நடித்துள்ளனர்.

அதில், ஓவியா காதல் பைத்தியம், ஆரவ் படம் ரிலீஸ் ஆகல, ஜூலி போராளி, ரைசா மாடலிங் பைத்தியம் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வேடம் கொடுக்கப்பட்டது. இதில், பைத்தியங்களுக்கு எல்லாம் டாக்டர் வையாபுரி தான். பிந்து நர்ஸ், கணேஷ் வார்டுபாய், சக்தி மெஸ் இன்-ஜார்ஜ், பெண்ணாக வளர்ந்த சினேகன் என்று ஒவ்வொருவரும் பல வித கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



பைத்தியக்கார வேஷம் போட்டும் தன்னுடைய காதலன் ஆரவ்வை விடாமல் துறத்தி எனக்கு உம்மா கொடு, உம்மா கொடு என்று தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை தாங்காத ஆரவ் இதனை பிக்பாஸிடம் தெரியப்படுத்தினார். அதன் பிறகு ஓவியாவிடம் அவரே கூலாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிக்பாஸ் குடும்பத்தினரும், இனிமேல், ஓவியா என்ன சொன்னாலும் பொறுத்துக்கொள்வோம், அவளுடன் சேர்ந்திருப்போம் என்று ஒரு முடிவெடுத்துள்ளனர்.



இதன் பிறகு மற்றொரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் பாடலுக்கு ஏற்ப பந்தை அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும். இதில், ரைசா தனக்குத்தானே ஆப்பு வச்சுக்கொண்டார். தன்னுடைய முகத்தில் முட்டை உடைத்துக் கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்