ஆப்நகரம்

தகுதியை இழந்த ஓவியா தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயற்சி!

நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதியில்லாதவள் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.

TNN 4 Aug 2017, 10:36 pm
நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதியில்லாதவள் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal haasan bigg boss tamil episode 40 updates
தகுதியை இழந்த ஓவியா தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயற்சி!


பரணியைப் போன்றும் தற்போது ஓவியாவும் மனநலம் பாதிக்கப்பட்டு வருகிறார். அதோடு காதல் தோல்வியும் கூட. சில நேரம், நன்றாக பேசும் ஓவியா, சில நேரம் அழுது கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டிருக்கிறார். இன்று நடந்த கயிறு இழுத்தல் போட்டியில் கூட ஓவியாக கலந்து கொள்ளவில்லை. அதில், கணேஷ், வையாபுரி, பிந்து, சினேகன், ரைசா அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்த அண் ஆரவ்வை அடுத்த வாரம் நாமினேட்டுக்காக தேர்வு செய்தது. இதற்கிடையில், தனக்குத் தானே வாயில் டேப் ஒட்டிக்கொண்ட ஓபியா, நான் இங்கு இருக்க தகுதியில்லாதவள்.



என்னை உடனே வெளியேற்றிவிடுங்கள். இல்லையென்றால், என்னை கூப்பிட்டு பேசுங்கள். எனக்கு மனநல மருத்துவரின் உதவி வேண்டும். அவருக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்படி கூறிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென்று தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மற்றவர்கள், அவரை காப்பாற்றி அறையில் படுக்க வைத்தனர். அதன் பிறகு காயத்ரியை அழைத்து கொஞ்ச நேரம் ஓவியாவை பார்த்துக்கொள்ளுங்கள். இன்னும் 45 நிமிடத்தில், அவரின் மேனேஜர் வந்து அழைத்துச் செல்வார் என்று பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்